Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
இந்த புத்தகத்தை நான் இந்த நேரத்தில் வெளியிடாமல் இருந்தால் என் வயோதிப காலத்தில் கண்டிப்பாக இதை நினைத்து வருத்தப்படுவேன் என்பது மட்டும் அதிக நிச்சயம். ஏன் என்றால் இந்த வய
இந்த புத்தகத்தை நான் இந்த நேரத்தில் வெளியிடாமல் இருந்தால் என் வயோதிப காலத்தில் கண்டிப்பாக இதை நினைத்து வருத்தப்படுவேன் என்பது மட்டும் அதிக நிச்சயம். ஏன் என்றால் இந்த வயதில் தான் எல்லோரும் ஒருவிதமான மந்திர சுழற் சக்கரத்திற்குள் சென்று வருகிறோம்.அதில் நானும் விதிவிலக்கில்லை. ஒரு விதமான வயது, தோழமை, ஈர்ப்பு, புரிதல், நேசம், ஏமாற்றம், உணர்வு, உறவு, பிரிவினை, பிதற்றல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தையும் வெவ்வேறு சமயங்களில் உணர்ந்து உள்வாங்கி கவிதை நடையில் பிரதிபலித்திறுக்கிறது.
இக்கவிதை தொகுப்பு முரண்பாடு மேல் கட்டப்பட்டிருக்கிற ஒரு கண்ணாடி கட்டிடம். கண்ணாடி என்பதினாலே உடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை நமக்குள் இப்போதே உயர்ந்திருக்கும். முற்றிலு
இக்கவிதை தொகுப்பு முரண்பாடு மேல் கட்டப்பட்டிருக்கிற ஒரு கண்ணாடி கட்டிடம். கண்ணாடி என்பதினாலே உடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை நமக்குள் இப்போதே உயர்ந்திருக்கும். முற்றிலும் உண்மையே. வாங்கி வாசியுங்கள், உங்கள் சிந்தனை கற்களை எறியுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம். உடைப்படும் அத்தனை கண்ணாடி துண்டுகளும் வாழ்வின் உண்மையை முகமெதிரே காட்டும். நாமே வெட்கப்படும்படியான, நம்மையே சங்கடப்படுத்தும் மறுக்கமுடியாத தவிர்க்க முடியாத வாழ்வின் உண்மைகள். தமிழ் மணக்க. -துரை.விமல்ராஜ்
உண்ணும் உணவில் கொஞ்சம் கட்டுக்கம்பிகளை சேர்த்து கொள்ளுங்கள் என்று யாராகிலும் சொன்னால் என்ன செய்வீர்கள்? என்னிடம் கேட்டால் உடல் மெலிந்து, கூனி குறுகி, குருதியின் சூடு தனி
உண்ணும் உணவில் கொஞ்சம் கட்டுக்கம்பிகளை சேர்த்து கொள்ளுங்கள் என்று யாராகிலும் சொன்னால் என்ன செய்வீர்கள்? என்னிடம் கேட்டால் உடல் மெலிந்து, கூனி குறுகி, குருதியின் சூடு தனிந்து, ஒட்டி உலர்ந்து ஏதோ மூச்சு விடும் எண்ணங்களெல்லாம் கட்டப்பட கொஞ்சம் கவிதைகள் அவசியமே. ஒரு கவிதை சொல்லுங்களேன் என கேட்கும்போது 'அம்மா' என்ற சொல்லுக்கு மேல் கவிதை உண்டா என்று சாப்பிட்டு கை கழுவி நழுவி விடுகிறோம் நம்மில் பலர். என்றாலும் கவிதைகள் தான் எத்தனை தினுசுகள். குண்டா ஒரு கவிதை, ஒல்லியா ஒரு கவிதை, உம்முனு ஒரு கவிதை, கம்முனு ஒரு கவிதை, முகம் கழுவி, எண்ணை வைத்து தலை வாரி லட்சணமா ஒரு கவிதை, இதெல்லாம் அழுக்கா என்ன என்றொரு கவிதை, சீனி வெடியென ஒரு கவிதை, வெங்காய வெடி என மற்றொரு கவிதை, ஊசி குத்துகிற மாதிரி ஒரு கவிதை, கடப்பாரையால் ஈரலை நெம்பிவிடுகிற கவிதை. இப்படி கவிதைகள் தன்னளவில் ஊறிக்கொண்டே, நச்சரித்துக்கொண்டே இருக்கின்றன. கண்டதையும் கவிதையாக்கலாம் என்ற நம்பிக்கை கவிஞனுக்கே உரித்தான பார்வை. எழுத்துகளில் கழிவு இல்லை. இதனை வாசிக்கும்போதே உங்கள் எண்ண ஓட்டங்களை இடை மறித்து, அத்தனை மணி நேரம் இறுகியிருந்த உங்கள் உதடுகளில் புன்னகை பூத்தால், தலை நிமிர்ந்து 'ஆமா' என்று உங்களோடு நீங்களே சொல்லிக்கொண்டால் மறக்காமல் பகிருங்கள்.
- துரை. விமல்ராஜ்
It takes consistent for a rainbow to pop up. But this book, i consider, to be a Seven colour fantasy that is formed after various storms and drizzles of rain collected together with petrichor.
It takes consistent for a rainbow to pop up. But this book, i consider, to be a Seven colour fantasy that is formed after various storms and drizzles of rain collected together with petrichor.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.