Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
இப்புத்தகத்தின் ஒரு பாடலில் உள்ள பின்வரும் வரிகளை கொண்டே முறையே இப்பாடல்களையும், இதன் ஆசிரியரையும் அலங்கரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
"திரை மூடி
இப்புத்தகத்தின் ஒரு பாடலில் உள்ள பின்வரும் வரிகளை கொண்டே முறையே இப்பாடல்களையும், இதன் ஆசிரியரையும் அலங்கரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
"திரை மூடி ஒரு விளக்கு
அகல் தூண்ட அகரமோ
கறை நீக்கி கண்வழி
காண்பதென்ன கடவுளோ".
இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கடவுள் வாழ்த்து பாடல்கள் இவர் தியான நிலையிலிருக்கும் போது அருளப்பட்டவையாதலால், தாம் இப்பாடல்களின் ஆசிரியராக அறியப்படுவதைவிட இப்பாடல்களை தம் கடவுளின் ஒரு உருவமாக அறிமுகப்படுத்துவதிலேயே பெருமை கொள்கிறார். இத்தனை சிறப்பான பாடல்களை எழுதிவிட்டு ஒருவர் இவ்வளவு வருடம் எளிமையாக இந்த உலகில் நமது சமகாலத்தில் வாழ்ந்து வருகிறார் என்பதே வியப்பும், பெருமையும் கொள்ளச்செய்கிறது.
இயற்கை தன் இல்லமான இந்த உலகத்தில் தினம் சமைக்கும் கவிதைகளில் சில இங்கு தமிழ் ஓசைகளில் சிலையாகியிருக்கிறது. மறந்துபோன நிலாச்சோறு நினைவுகளையும், பள்ளிக்கூட குறும்புகளை
இயற்கை தன் இல்லமான இந்த உலகத்தில் தினம் சமைக்கும் கவிதைகளில் சில இங்கு தமிழ் ஓசைகளில் சிலையாகியிருக்கிறது. மறந்துபோன நிலாச்சோறு நினைவுகளையும், பள்ளிக்கூட குறும்புகளையும், பாட்டியிடம் கதை கேட்ட ஆர்வத்தையும் ஆசுவாசமாய் அசைபோட தமிழ் சாமரம் வீசுகின்றது. மண்ணை பிரிந்த சோகமும், தனிமை காட்டும் ஞானமும், சின்ன சின்ன ஆசையும் சிங்காரம் கட்டி தமிழ்ப்பாட்டியோடு செல்லம் கொஞ்சுகிறது.
அதிகாலை மற்றும் அந்திமாலை வானம் தரும் வரங்களும், பகலிரவு அயராது இயற்கை வகுத்த நியதிகளும், மேக வாசல் தாண்டி வாசல் வந்த மழைகளும், பூமியென்று பூத்து நின்ற புனிதமும் தமிழ் பூசிக்கொண்டு இங்கு தாளம் போட்டு பாடுகின்றன. அன்னையின் அன்பும், தாலாட்டின் கனிவும், காதலின் அழகும், குழந்தையின் குழைவும், குடும்பத்தின் உறவும் தமிழ் கவிதைத்திருவிழாவில் தேர்மீது உற்சவம் வருகிறார்கள்.
பம்பரம் போல சுழன்றோடிக்கொண்டிருக்கும் கம்பியூட்டர் காலத்தில் இந்த படைப்பு வாசிக்கும் அனைவரையும் ஒரு கணம் நிதானித்து தங்களின் வேர்களை நோக்கியும், தங்கள் பூர்வீக மண்ணின் வனப்பு மிகுந்த வாழ்க்கை குறித்தும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அதிகாலை சூரியனாய், சன்னலோர மழையாய், தாயின் தாலாட்டாய் இந்த கவிதைகள் தமிழ் வாசம் வீசும் வாசகர்களின் மனம் குளிர, முகம் மலர, நினைவுகள் வருடி சுகமளிக்கட்டும்.
இந்த பானையில் இருந்து சில பருக்கைகள்:
"உனக்கு விழா
தினம் எடுக்கிறது
தனக்கென வாழாத வானம்"
"ஒரு குருவியின்
பாடலோடு
குளிர்காலை
கும்மியடிக்கிறது"
"முத்தாரம் தீட்டயிலே முழுமதியே நீ உறங்கு
முத்துப்பல் சிரிக்கையிலே முகவடிவே நீ உறங்கு"
"ஏர்க் காட்டில் போறவளே
என் காட்டில் பயிர் இல்லையோ"
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.