Share this book with your friends

Oroonoko / ஓருநோக்கோ

Author Name: Krishna Prasad | Format: Paperback | Genre : Poetry | Other Details

மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி விலங்கினும் கீழ்த்தரமாய் நடத்தி தன் சுயநலங்களை பூர்த்தி செய்து கொள்ளும் கூட்டங்கள் பெருவாரியானவை ஐரோப்பிய நாடுகளே.  பதினாறாம் நூற்றாண்டு துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவர்கள் பல நாடுகளில் காலனி அமைத்து அந்நாட்டுச் செல்வங்களைச் சூறையாடினார்கள், அது மட்டுமல்லாது அந்நாட்டு மக்களையும் அடிமையாக்கி மிகவும் கீழ்தரமாக நடத்தினார்கள், இப்படிப்பட்ட இழிநிலையை அனுபவித்து மாண்டவனே மாவீரன் ஓருநோக்கோ.  அவனது அவலக்கதையை நேரில் கண்ட ஆஃப்ரா பென் எனும் அம்மையார் அவனது சரிதத்தை நூலாக வெளியிட்டார் அதனைத் தழுவியே இந்தத் தமிழ் காவியம் புதுக்கவிதை வடிவில் உருவானது.

இதனைப் படிப்பவர் நிச்சயம் உணர்ச்சி வசப்படுவர்.  கண்முன் நடக்கும் ஆராஜக அநீதிகளைத் தட்டிக் கேட்க முன்வருவர்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

கிருஷ்ணபிரசாத்

தனியார் துறையில் முதுநிலைத் துணைத் தலைவராய் பணியாற்றும் திரு.  கிருஷ்ண பிரசாத் அறிவியலும் பொறியியலும் பின்புலமாகக் கொண்டவர்.  

தமிழையோ தமிழ்த்துறையையோ சாராத இவர் தமிழின்பால் அளவற்ற பற்றும் ஆர்வமும் மிக்கவர்.  அத்தகு உணர்வுடன் கிருஷ்ண பிரசாத் பல நூல்களை எழுதி பதிப்பித்துள்ளார்.  அதனுள்ளும் கலீல் ஜிப்ரானின் கவிதைகள், பட்டினத்தார் பாடல்கள் புதுக்கவிதை வடிவில், திருக்குறள் - புதுக்கவிதை வடிவில் ஆகிய பெருநூல்களைத் தந்துள்ளார்.  பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் எழுதியுள்ளார்.  இதோ இப்போது ஓருநோக்கோ.  இவரின் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவமாக.

Read More...

Achievements

+3 more
View All