Book Description
3 நூல்களின் தொகுப்பு 1. தமிழகம் ஊரும் பேரும்- டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை ஆசிரியர், நிலம்-மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்குடி-படை-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக்கொண்டு இந் நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புக்களும், பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டில் சில ஊர்ப்பேர்கள் சிதைந்தும் திரிந்தும் மருவியும் மாறியும் தத்தம் முதனிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந் நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந் நூலுள் பொலி தரும் சில ஊர்ப்பேர்களின் வரலாறு, சாம்பியும் சோம்பியும் நலிந்தும் மெலிந்துங்கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம்புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் கவலையை நீக்கி, அதன்மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாம். 2. தொழில் வளம் - அ. மு. பரமசிவானந்தம் இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றிலேயே சிறந்த ஒரு காலமாகும். எத்தனையோ நூற்றாண்டுக் காலங்களிலெல்லாம் காண முடியாத பலப்பல மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் இந்த நூற்றாண்டில் நம்மால் காணமுடிகிறது. நேற்றுப் புத்தம் புதியதாகப் போற்றப்பட்ட ஒன்று. இன்று மெத்தப் பழமையதாக மாறிவிடுகிறது. நாள்தோறும் புதுப்புது ஆராய்ச்சிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மனிதன் தன் வாழ்வின் தேவைக்காக அமைத்துக் கொள்ள விரும்பும் சாதனங்களின் வழி அவனே நினைத்துப் பார்க்க முடியாத பல புதிய உண்மைகளைக் காண நேரிடுகிற்து. 3. யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்