Book Description
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவாவர்ண கீர்த்தனைகள், அவர் நமக்கு அருளிய பொக்கிஷம். அந்தந்த சக்ரத்திற்கு தகுந்த ராகங்களை தேர்ந்த்தெடுத்த விதம், அருமையிலும் அருமை. அவர் படிப்படியாக கீழ் மட்டத்திலிருந்து நடு பிந்து வரையிலும், நன்றாக பாட்டை படைத்துள்ளார். ஓவ்வொரு சக்கிரத்தின் சிறப்பை எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்! ஓவ்வொரு பாட்டு பாடும் போது, அந்த அம்மனே அந்த சக்கிரத்தில் வந்து உட்காருவது போல் உணர்கின்றோம். கடைசி மந்திர கீர்த்தனையில், சக்ரத்திலுள்ள எல்லா மந்திரங்களும் அதில் அடங்கும். இதுவரை இத்தகைய கீர்த்தனைகளை தெளிவான குறியீட்டில் (நொட்டேஷன்) இல்லாததால் மாணவர்கள் முறையாக கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் இந்த புத்தகம் வழியாக தெளிவான குறியீட்டில் (நொட்டேஷன்), இந்த பாடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வரலாற்றின் சில முக்கிய சம்பவங்களை, ஓவியங்களாக வரைந்து கொண்டுவந்துள்ளோம். இந்த புத்தகம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக மூன்று பாஷைகளில் வெளியிட்டுள்ளோம்.( (தமிழ் தெலுங்கு ஆங்கிலம் )