Login
Literature & Fiction | 19 Chapters
Author: Idhazhini Krishnan
Aasiriyari kadhai nammai kaipidiththu uvagai ennum pennin vaalkkaiyai kaana alaiththu selkirathu. Avalin uravu sikkalgalai, kanavugalai namakkul eluppugirathu. Avalin kelvigal avalukkaaga nammidam irunthu purappadugindrana. Perumudichchu pottu ovvoru mudichchaaga ovvoru aththiyaayaththilum avilkkiraar. Oru aasiramaththu pennaay arimugamaagum uvagai avalin kaalasoolal, aval kadanthu vantha paathai, aval ammaavin kadhai, yaemaatrappatta pengalin va....
உவகை எனும் இக்கதை தன் பெயருக்கு ஏற்றாற்போல வாசிப்பவர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. இக்கதையை வாசிக்க தொடங்கிய என்னால் வாசித்து முடிக்காமல் எழ முடியவில்லை. அவ்வளவு எதிர்பாரா திருப்பங்களுடன் ஆசிரியர் இக்கதையை அமைத்துள்ளார். தனக்கே உரித்தான எளிய நடையிலும், உரையாடல்களை பேச்சு வழக்கிலும் படைத்ததன் மூலம் இக்கதையின் ஆசிரியர் இயல்பாகவே நம்மை கதையின் ஊடே பயணிக்க வைக்கிறார். பொதுவாக எதிர்மறையான கதாபாத்திரங்களே கதைகளில் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்துவர். இக்கதையில் அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் எதிர்மறையான செயல்களுக்கு பின்புலத்தில் இருந்த அவர்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்த ஆசிரியர் தவறவில்லை. அனைவரையும் நல்லவர்களாக காட்டி பழியை காலத்தின் மீது போட்டுள்ளார் ஆசிரியர்.
நாடு, மதம், இனம், மொழி, சாதி போன்றவற்றின் அடிப்படையில் பிறரை எதிரிகளாக்கியே சமுதாய அமைப்புகள் இதுவரை கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. இவர்களின் பிறர்மீதான வெறுப்புணர்வை கூர்மைப்படுத்தும் வண்ணமே பலநூல்கள் உள்ளன. ஆனால் அனைவரையும் அரவணைக்கும் இயல்பு கொண்ட ஆசிரியர் இதழினி கிருஷ்ணன், இக்கதையில் அவ்வாறே நல்ல கதாபாத்திரங்களைக் கொண்டே படைத்துள்ளார் அதேசமயம் நல்ல மனிதர்கள் சுய இச்சையால் செய்யும் சிறு தவறுகளால் ஏற்படும் விபரீத விளைவுகளையும், அவ்வாறு ஏற்படும் விளைவுகளைக் கண்டும் தன தவறுகளை அறிக்கையிடாததால் ஏற்படும் நாசகர விளைவுகளையும் ஆசிரியர் இக்கதைமூலம் உணர்த்துகிறார்.
"பிரச்சனைகள் பேசப்பட்டால் தான் தீர்வு கிடைக்கும்" எனும் மாபெரும் உண்மையை இக்கதைமூலம் அவர் சுட்டுகிறார். விளக்கமாக கூற வேண்டுமென்றால் "பேசப்படாத பிரச்சனைகள் தவறான புரிதல்களை ஏற்படுத்தும். தவறான புரிதல்கள் அப்பிரச்சனைகளுக்கு வலுசேர்க்கும்" என்பதை ஆசிரியர் தம் பாணியில் அழகாக நிறுவியுள்ளார். இதுபோன்று வெறுப்புணர்வு களை தூண்டாத, அன்பை அடிப்படையாக கொண்ட பல கதைகள் இறைவன் படைத்த உலகு அழகு பெற தேவைப்படுகின்றன.
‘உவகை’ எனும் இந்த அழகிய கதை, ஆசிரியரான என் அன்பு சகோதரி இதழினி கிருஷ்ணனுக்கு நல்ல ஒரு தொடக்கத்தையும், அடித்தளத்தையும் அமைத்து கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
கி. அன்பழகன்
சித்த மருத்துவர்
தீர்த்தகிரி & சின்னசாமி குடும்ப உறுப்பினர்கள்
சொந்த சகோதரியாய் ஏற்ற பா.கண்மலர், கி.சாமுவேல் ஜஸ்டின் ராஜ், வி.சு.நந்தினி
நண்பர்கள் சே.ரஞ்சனி, மு.திலகவதி, க.அப்சல் அகமது பா.விவேக், டே.லீ.ஜெபராணி, ச.சு.நாகராஜன், இரா.பவளா, க.பிரியதர்ஷினி ரா.பிரகதி, சு.பிரபாவதி, சு.சுஸ்மிதா, கி.நிஷாந்தி, வே.சக்திபிரியா, ரா.பிரியதர்ஷினி, ச.ஷாலினி, கோ.சீனிவாசன் மற்றும் என் கல்லூரி நண்பர்கள்
இளவல்கள் ம.சாருமதி, ர.அபிநயசுந்தரி, இரா.வைஷ்ணவி ஸ்ரீ, ம.ப.கௌதம்
அணிந்துரை வழங்கிய கி.அன்பழகன்
மதிப்புரை வழங்கிய காரிகை காதலன்
புத்தக வடிவில் வெளிக்கொணரும் Notion Press அமைப்பினர்
பிரதிலிபி தோழமைகள், இன்ஸ்டாகிராம் நண்பர்கள்
என்று என் எழுத்துக்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் என் வணக்கத்தினையும் நன்றியினையும். உரித்தாக்குகிறேன்.
Literature & Fiction | 19 Chapters
Author: Idhazhini Krishnan
Support the author, spread word about the book to continue reading for free.
Uvagai
Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}
{{ (txt.comment_text.length >= 250 ) ? txt.comment_text.substring(0,250) + '.....' : txt.comment_text; }} Read More
{{ txt.comment_text }}
{{txt.timetag}} {{(txt.comment_like_count>0)? txt.comment_like_count : '' }}{{x1.username}} : {{ (x1.comment_text.length >= 250 ) ? x1.comment_text.substring(0,250) + '.....' : x1.comment_text; }} Read More
{{x1.comment_text}}
{{x1.timetag}} {{(x1.comment_like_count>0)? x1.comment_like_count :''}}{{x2.username}} : {{ (x2.comment_text.length >= 250 ) ? x2.comment_text.substring(0,250) + '.....' : x2.comment_text; }} Read More
{{x2.comment_text}}
{{x2.timetag}} {{(x2.comment_like_count>0)?x2.comment_like_count:''}}