626 Views

Marurubamakungal

Bibles | 14 Chapters

Author: R.sathrak

626 Views

marubamakungal  sathrak  tamil books best sellingtamil books novelstamil books for kids tamil books best sellingtamil books about historythirukural book in tamiltamil books best selling combotamil books best selling low pricetamil books combotamil books combo offerstamil books combo packtamil books collectionmohan c lazarus book in tamilmohan c lazarus christian book in tamiljesus redeems books tamil mohan c lazarustamil books devotion....

புதிய படைப்பு


தேவனுடைய புதிய படைப்பான நாம், எல்லாவற்றிலும் தேவனால் புதிதாக்கப்பட்டிருக்கிறோம். பழையன எல்லாம் ஒழிந்துப் போயின. எல்லாம் புதிதாகின என்ற வேத வார்த்தையின்படி நாம் புதிய சிருஷ்டியாக இருக்கிறோம். நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு அவயங்களும் தேவனுடைய இரத்தத்தினாலும், வார்த்தையினாலும், வல்லமையினாலும் புதிதாக்கப்பட்டிருக்கிறது. புதிதான ஆவிக்குரிய குணங்கள் நம்மில் உண்டாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய மனங்களும் நாளுக்கு நாள் மகிமை மேல் மகிமையடைந்து, கிருபை மேல் கிருபையடைந்து மறுரூபமாக்கப்படுகிறது.

நீங்கள் உலகத்திற்குரியவர்களல்ல. ஜென்ம சுபாவங்கள் உங்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தேவனுக்குரியவர்கள். தேவனுடைய செல்லபிள்ளைகள். உன்னதத்தில் கிறிஸ்துவோடு கூட அமர்ந்திருக்கும் பாக்கியம் பெற்றவர்கள். வல்லமையுள்ள தேவ வார்த்தையினால், ஆண்டவரோடு அனுதினமும் அன்பின் உறவினை வைத்திருக்கும் தகுதி, நமக்கு மட்டுமே கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்டுள்ளது. அனுதினமும் வேத வசனங்களை ஆராய்ந்து படிக்கும் அனுபவத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வேதத்தின் மேல் அளவில்லாத ஆசைக் கொண்டவர்களாக மாறுங்கள்.

அன்புடன் சத்தியத்தை மேய்ந்துக்கொள்ளுங்கள். தேவன் தம்முடைய மகத்துவங்களை நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். வேத வாசிப்பை அந்நிய காரியமாய் எண்ணாமல் வேத வசனங்களை கிறிஸ்துவுக்குள் சொந்தம் கொண்டாடுங்கள். வானமும், பூமியும் ஒழிந்துப் போனாலும், அவருடைய வேத வார்த்தைகள் ஒழிந்துப்போவதில்லை. அவைகள் நம்முடைய கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது. பேதைகளை ஞானிகளாக்கும் வல்லமை வேத வசனங்களுக்கு உண்டு. வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனமும் தேவனுடைய வல்லமையை தன்னகத்தே கொண்டவைகளாக இருக்கிறது.

விசுவாசத்தின் ஊற்றாய் தேவ வசனங்கள் உள்ளன. வேதத்தை படிக்கப் படிக்க நம்மில் விசுவாசம் பெருகுவதை காண முடியும். ஆவியின் பட்டயமாகவும் சத்துருவை முறியடிக்கும் ஆயுதமாகவும் வேத வசனங்கள் இருக்கிறது. அசதியான நேரங்களிலும், கவலையிலும், கஷ்டங்களிலும் நம்மை ஆற்றி தேற்றி பலப்படுத்தும் நல்ல செயல் ஊக்கியாகவும் வசனம் இருக்கிறது.

தேவ வசனங்களை வாசிக்கவும், ஆராயவும், தியானிக்கவும், தேடவும் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் உலகில் சிறப்பானவர்களாக திகழ்வார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. அவர்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். அவர்களுக்கு விரோதமாக எழும்பும் ஆயுதங்கள் வாய்க்காதே போம்.

கிறிஸ்துவுக்குள் நம்மை ஸ்திரப்படுத்தி சபையில் நிலைநிறுத்தும் வலிமை வசனத்திற்கு இருக்கிறது. தேவன் தம்முடைய வசனத்தின் மூலமாக நம்மோடு பேசுகிறார். எனவே வசனத்தை உங்கள் வாழ்க்கையாக்குங்கள். வசனத்தை கேட்கிறவர்களாய் மட்டுமல்ல அதின்படி செய்கிறவர்களுமாய் மாறுங்கள்.

எத்தகைய கடுமையான நோய்களையும் குணமாக்கும் வலிமை வசனத்திற்கு இருக்கிறது. வசனம் குணமாக்கும் நல்மருந்தாக இருக்கிறது. அது காயங்களை ஆற்றும் தைலமாக இருக்கிறது. உங்களில் நல்ல ஆரோக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது. அவருடைய வார்த்தையில் ஜீவனும், வல்லமையும் உண்டு. எனவே எல்லாவற்றுக்குமான தீர்வாக வசனம் இருக்கிறது.

நாம் கடைசிகாலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். வசனம் கிடைக்கக் கூடாத பஞ்சம் வர இருக்கிறது. எனவே இன்றைய நாள்களில் உங்களால் முடிந்தவரை தேவ வசனத்தை உங்கள் இருதயங்களில் நிரப்பிக்கொள்ளுங்கள்.

நாட்கள் பொல்லாதவைகளானபடியால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். உபத்திரவங்களை கண்டு மனம் சோர்ந்துப் போகாதீர்கள். உபத்திரவங்களின் மத்தியிலும் சந்தோஷத்தோடு தேவனுக்காய் சேவை செய்ய உங்களை சரிப்படுத்திக் கொள்ளுங்கள். கலப்பையில் கைவைத்து தொடர்ந்து களமாடும், உங்களை தடுக்க யாராலும் முடியாது என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

ஆண்டவருக்காக அல்லும் பகலும் அயராமல் சேவை செய்யும் உங்களை பாராட்டுகிறேன். மனிதனுடைய பார்வைக்காகவோ, மனிதனுக்காகவோ ஊழியம் செய்யாமல் ஆண்டவருக்காக ஊழியம் செய்கிறோம் என்கிற தெளிவான புரிதலோடு ஆண்டவரின் பணி செய்ய உங்களை அன்புடன் அழைக்கிறேன். இரவும்,பகலுமென ஆண்டவருக்காக நீங்கள் செய்யும் ஊழியத்தை அவர் ஒருபோதும் மறந்துவிடமாட்டார். மகிமையான பரலோகத்தில் அதற்கான சரியான பலனை கண்டிப்பாக உங்களுக்கு அளிப்பார்.

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}
Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}
Like what you read?
{{global.chaps[12].like_count}} {{global.chaps[12].like_text}}
Like what you read?
{{global.chaps[13].like_count}} {{global.chaps[13].like_text}}

{{user_data.book_status}}

Bibles | 14 Chapters

Author: R.sathrak

Support the author, spread word about the book to continue reading for free.

Marurubamakungal

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}