Share this book with your friends

ANNAVIN KAVITHAIGAL / அண்ணாவின் கவிதைகள்

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Poetry | Other Details

இதழ் வாழ்த்து
(அண்ணா தீட்டிய இறுதிக் கவிதை)
என்தம்பி தருகின்றான் எழிலார் ஏடு!
'தென்னகம்' என்னும்ஒர் தீந்தமிழ் ஏடிது
என்னகம் விழைத்திடும்பல் இயல்புடை இளவலாம்
பொன்னகம் என்னுமோர் பொலிவுசேர் கொங்கினான்
தன்னகம் விளைந்தஓர் தாழையாம் காணீரே!தென்னகம் என்பது தேயமா? மாயமா?
என்றேலாம் பற்பலர் ஏசலைப் பேசினர்
அன்றெலாம் நமக்கென யார் துணை என்றனம்
கன்றெலாம் கனிஉதிர் காலமே வந்தது.

குன்றுபோல் நின்றனன், கொள்கையிற் திளைத்தனன்,
மன்றெலாம் கண்டனன், மதியழகன் எனும் பெயரினன்,
கொன்றையும் வென்றியும் கொண்டவர் திறத்தினை
அன்றவர் ஈட்டிய அருந்தமிழ்க் கீர்த்தியைச்
சென்றிவர் படித்துமே செப்பினர் நாட்டிடை
சேயிழை காணலில், செய்தொழில் தேடலில்
பாய்விழை மனதினர் பற்பலர் நடுவினில்
பாங்குறு இளவல்நற் பணிபல புரிந்தனன்
ஆங்கவன் ஆற்றிய அரும்பணி யாம்கரு
ஈன்றதோ பெருமிதப் போர்ப்படை யாகுமே!

அண்ணா மலைப்பல் கழகத்தி னின்றே
அணியொன்று கிளம்பிற்று காண்பகை வென்றே.
அந்நாளில் தமிழ்நாட் டார்கண் டதனைஎல்லாம்
அழகாக நாட்டவர்முன் காட்டினர் சொலல்வல்லார்!

ஆ இதுவோ நமதுமுறை! மருபிதுவோ! மாண்பிதுவோ
என்றே மக்கள்,
மனமுருகிக் கேட்டுணர்ந்து மகிழ்ந்தே நின்றார்.
மதியழகன் தந்ததிந்த எழுச்சி என்றே
மார்தட்டிப் புறப்பட்டார் பலரும் நன்றே!
கழகத்தின் எழிலுருவம் அமைந்த காலை
கருத்தளித்துக் காவல்நின் றான்இந்தக் காளை.
இழுக்கென்று சழக்கர் சிலர்கூறும் வேளை,
ஈதென்ன வம்புஎன ஓய்ந்தி டாமல்
என்னகம் சேர்உண் மைதனை எடுததியம்ப
எனக்குண்டு உரிமைகாண் என்றே கூறி,
சினங்கொண்டார் சிலர் தந்த கோலும் வாளும்
சிவப்பேற்றி உடலதனை வாட்டக் கண்டும்.
சிறிதேனும் பதறாது சிரித்தே நின்று
செந்தமிழைக் காப்பதற்கோர் பரிசாம் என்றார்!
அவர் சென்று காணாத ஊர்தா னில்லை...

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

 காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All