Share this book with your friends

ANURAAGAM / அனுராகம் A WONDER BETWEEN TWO HEARTS / இரண்டு இதயத்திற்கு இடையில் ஒரு அதிசயம்

Author Name: Kanchana mala Mahesh | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அழகிய அனுவை (முகம்) கொண்ட பாவையின் வாழ்க்கையை கூறும் கதை “அனுராகம்”. இதுதான் என்னுடைய முதல் கதை. சொல்லத் துடிக்கும் இதழுக்கும், சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் பெயர்தான் காதல். அத்தகைய புனிதமான அழகான காதல் கதை இப்புத்தகத்தின் வாயிலாக காண்போம். காதல் என்பதும் அன்பு என்பதும் ஒன்றாகாது. ஏனென்றால் காதல் தோன்றியவிட ஒரு கணம் போதும், அது மரணம் வரை நம்மை அணைத்து இருக்கும். உயிர் பிரிந்தாலும், உடல் மறைந்தாலும் நம்முள் வாழும் கடவுளை போல என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். அதுபோல அனுவின் மனதில் அகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறான். அவள் வேதனையோடு நினைக்கும் வார்த்தைகள் “ஒவ்வொரு நாளும் உறுதியாகத்தான் இருக்கிறேன் அகில் உன்னை மறக்க வேண்டும் என்று. ஆனால் உன் ஞாபகம் வரும் பொழுது என்னையும் அறியாமலே உன்னையே நினைக்கிறேன்...”. அவள் தற்கொலை என்னும் பள்ளத்தில் தள்ளினாலும் அதிலிருந்து அவளை காப்பாற்றும் அர்ஜுன் அவளை தாம்பூல தட்டில் வைத்து தாங்குகிறான். இதுவே இந்த கதையின்  சிறப்பம்சம்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காஞ்சன மாலா மகேஷ்

என் பெயர் காஞ்சன மாலா. அனுராகம் என்னுடைய முதல் கதை. அனுராகம் கதைதான் என்னை மேலும் கதை எழுத தூண்டியது. கதை எழுதுவது என்னுடைய பொழுதுபோக்கு அல்ல என்னுடைய மிகப்பெரிய ஆசை. நான் ஒரு மலையாளி, என் ஊர் பாலக்காட்டில் மஞ்சபரை ஆகும். நான் மகளிர் குழு தலைவி என்பதில் நான் பெருமை அடைகிறேன். கதை எழுதுதல், வணிகம் செய்தல், தையல் போன்ற பலவகையான நடவடிக்கைகளில் ஈடுபடுதளில் ஆர்வம் மிகுதியாக உள்ளது. ரசிப்பதற்கு ஏதேனும் ஒரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது. திரைப்படம் பார்ப்பது மற்றும் புத்தகங்களைப் படித்தல் மூலமாகதான் எனக்கு கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நான் எனது 17-வது வயதிலிருந்து கதைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். என் கதைகளை படமாக்குவதில் எனக்கு பெரிய ஆர்வம் உள்ளது. சில ஏமாற்றம் வாழ்க்கையின் மாற்றங்கள் ஆகின்றன. முழுநேர சிந்தனையையும் உனக்காக செலவழித்த பின்னும் நாட்கள் நகர மறுக்கிறது, உன் சிந்தனையில் இருந்து பிரிவதற்கு. நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோர் இடம் மட்டுமே வரும்.

Read More...

Achievements