You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதிராவிட மொழிகள் என்று ஒரு மொழியினமாக வகுக்கப்பெறும் மொழிகளுள் தமிழ்மொழியே பண்டைநாள் தொட்டு, திருத்தமுற் றமைந்ததும், செவ்விய முறையில் வளர்ச்சிபெற்றுவந்துள்ளதுமாகும். சங்கக் கூறின், திரவிடமொழி யினத்தின் வகைக்குறிமொழி தமிழே என்று கூறலாம்.
“திராவிடம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அது தென்னிந்திய மக்களிற் பெரும்பகுதியினாாற் பேசப்பட்டு வரும் உண்ணாட்டு மொழிகளைக் குறிப்பதாகும். குஜராத்தி மொழியும், மாராத்தி மொழியும் வழங்கும் பகுதிகளொழிந்த மேற்கிந்தியப் பகுதியும், தக்கணப் பகுதியும், ஒரிஸா நாடும் நீங்காலாக, விந்தியமலைக்கும், நருமதை யாற்றிற்கும், குமரிமுனைக்கும் இடைப்பட்ட தென்னிந்தியப் பெரும்பகுதியிற், பண்டைக்காலத்திலிருந்தே, ஒரேமொழியின் கிளைகளாகிய பல திருந்தாமொழிகளைப் பேசும் குழுக்கள பலவற்றைக் கொண்ட மக்கட் பெருங்குழுவொன்று பரவி வாழ்ந்துவந்திருந்ததாகத் தோற்றுகிறது. விந்தியமலைக்கு வடக்கேயுங் கூட பலூச்சிஸ்தானம் வரையிலும், வங்காளத்தைச் சேர்ந்த இராஜ்மகால் மலைகள் வரையிலுங்கூட இம்மொழியினத்தைச் சேர்ந்ததாக எண்ணக்கிடக்கின்ற கிளைமொழிகள் சில வழங்கக் காணலாம்.
குஜராத்தியும், மராத்தியும், மராத்தியின் கிளைமொழியாகிய கொங்கணியும், ஒட்ரதேசம் அல்லது ஒரிஸா என்ற நாட்டார் பேசும் ஒரியாவும், வடமொழிச் சிதைவுகளுமாகிய இவை திராவிட மொழிகள் பேசுங் குழுவினரொழிந்த பிற இந்து மக்களால் ஆங்காங்குப் பேசப்பட்டுவரும் மொழிகளாம்.
இந்தியப் பெருநாட்டின் வட பகுதியிலேனும் தென் பகுதியிலேனும், எக்காலத்திலும் சமஸ்கிருதம் என்ற வட மொழி உண்ணாட்டு மொழியாக வழங்கியிருத்தல்கூடும் என்று நம்புவதற்கில்லை.
காழி.சிவ.கண்ணுசாமி பிள்ளை, அப்பாதுரைப் பிள்ளை
அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரில், 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்துவந்தார். பத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து தேயத்திற்குத் தம் பெற்றோர் சென்று குடியேறினமையால், இவரும் அவர்களுடன் சென்றார். இளமையிலேயே மதிநலம் வாய்ந்து விளங்கிய இவர், எளிதில் கல்விநலமும் வாய்க்கப்பெற்றார். பதினாறாம் ஆண்டு வரை இவர் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின், தம் தந்தையாரின் விருப்பப்படி ஓவியத் துறையிற் பயின்று தேர்ந்து உயர்ந்த பரிசும் பெற்றார். எனினும், அத்துறையில் தொடர்ந்துழைத்து வாழ்க்கையை நடத்த இவர் கருத்துச் செல்லவில்லை. இறைவனதாற்றலையும், பெருமையையும் தெரிக்கும் மெய்யுணர்வு நூல்களிலேயே இவர் கருத்துச் செல்வதாயிற்று. எங்கும் நிறைந்த பரம்பொருளின் பெருமையைத் தம் சமய உண்மைகட்கேற்ப யாண்டும் பரப்பித் தொண்டாற்றுவதே தலைசிறந்த வாழ்க்கைப் பணியாம் என்று இவர் தேர்ந்து கொண்டார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.