Share this book with your friends

ECHCHIL IRAVU / எச்சில் இரவு இலக்கிய கட்டுரை கதை

Author Name: Suradha | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

ஊசி என்பவள் தங்கத்தைப் பார்த்து, ஏண்டி தங்கம், இதோ எரியும் இந்த விளக்கு, குத்துவிளக்கா அல்லது குத்தும் விளக்கா?’ என்று கேட்டாள்.

'இது குத்தும் விளக்கல்ல, குத்தும் விளக்காக இருந்தால் நான் இதை விலை கொடுத்து வாங்கியிருப்பேனா?’ என்றாள் தங்கம்.

"குத்துவிளக்குகளை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். நம்மைக் குத்தும் விளக்குகளோ நம்மை விலை கொடுத்து வாங்குகின்றன’’ என்றாள் ஊசி.

அப்போது, எலி ஒன்று குத்துவிளக்கிலுள்ள எண்ணெயில் தன் வாலைத் தோய்த்துத் தன் வாலிலுள்ள எண்ணெயை நக்கிக் கொண்டிருந்தது. அதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஊசி என்பவள் தங்கத்தைப் பார்த்து, 'தங்கம் அந்த எலியைப் பாரடி! அது, அந்தக் குத்துவிளக்கிலுள்ள எண்ணெயை நக்காமல், தனது நீண்ட வாலை எண்ணெயில் தோய்த்து, அந்த எண்ணெயை நக்குகிறதே அது ஏன்?’ என்று கேட்டாள்.

'ஏனெனில் அந்த எண்ணெய்தான் எலியின் உடம்பில் காமரசத்தை வளர்க்கிறது. இவ்வாறு எண்ணெயில் தோய்ப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டே எலியின் வால் மிகவும் நீளமாகப் படைக்கப் பட்டிருக்கிறது” என்றாள் தங்கம்.

"கொக்கோக நுட்பங்களை உன்னிடம் இளைஞர்களும் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு வரும் எலிகளும் கற்றுக் கொள்கின்றன” என்றாள் ஊசி.

'பார்த்தாயா! பார்த்தாயா! உண்மையைச் சொன்னால் நீ என்னை ஊசிபோல் குத்துகிறாயே! இதனால்தான் உனக்கு ஊசி என்று பெயரிட்டார்களா?’ என்று கேட்டாள் தங்கம். -

'அடி போடி பைத்தியக்காரி ஊசி என்று எனக்கு ஏன் பெயர் வைத்தார்கள் தெரியுமா? புதுவைக்கு அருகிலுள்ள கதிர்காமம் என்னும் ஊரில் ஆய் என்னும் தாசி ஒருத்தி இருந்தாளாம். அவளுடைய தங்கை ஊசி என்பவள் மிகப் பெரிய ஏரி ஒன்றை வெட்டினாளாம். ஊசி என்பவள் வெட்டிய ஏரி ஆதலின் அதற்கு ஊசி இட்ட ஏரி என்று பெயரிடப்பட்டது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உவமைக்கவிஞர் சுரதா

சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

Read More...

Achievements

+15 more
View All