Share this book with your friends

EEZHAM SOLLUM KAALAM / ஈழம் சொல்லும் காலம் சிறுகதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த தொகுதி ஈழம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கியது.

வாப்பாவின் நீலக்கூடை சைக்கிளில் முதன்முதல் பாடசாலைக்கு முன்னர் இறங்கி கண்களின் முன் விரிந்திருந்த வெண்ணிற பளிங்காலான மாளிகைகள் போலத் தெரிந்த கட்டடங்களைப் பார்த்ததும் இனம்புரியாத குளிர்ச்சி உள்ளங்கைகளிரண்டிலும் பரவியது. எங்கள் வீட்டின்முன் பரவியிருந்த குருத்துமணற் துணிக்கைகள் பாடசாலை வளவிலும் பரவியிருந்தது. வாப்பாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். என் கண்மட்டத்தில் நிறையக் கருவிழிகள் அலைந்துகொண்டிருந்தன. என்னைச்சுற்றி சிப்பிகள் அலைவதைப்போல வெண்ணிற உடையில் நிறையப்பேர் திரிந்தார்கள். அவர்கள் தேவதைகள் போல தூய்மையானவர்களாக இருந்ததைப் பார்த்தபோது இன்றிலிருந்து நானுமொரு தேவதையென்றும் நினைத்துக் கொண்டேன். வீட்டு முற்றத்துக் குருத்துமணலுக்குள் காலைப்புதைத்து நடப்பதைப்போல வாப்பாவின் கைகளை இறுகப்பிடித்தபடி குருத்துமணலுக்குள் காலைப்புதைத்து வேகமாக வெளியே உந்தினேன். மணற்துணிக்கைகள் நட்சத்திரக் கூட்டமொன்று விசிறிப் பறப்பதைப்போல தெறித்தன.

Read More...
Paperback
Paperback 1500

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All