Share this book with your friends

ENGAE POGIROM (Thoughts & Sayings) / எங்கே போகிறோம்? சிந்தனைகள்

Author Name: Kundrakudi Adigalar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

முயற்சி - எந்த ஒரு செயலையும் நோன்பு போல் பிடிவாதமாக ஏற்றுக்கொண்டு செய்யும் மனப்போக்கு இருந்தால்தான் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

ஆன்மிகம் - சித்துக்களை காட்டி ஆன்மிகத்தை வளர்ப்பது செயற்கையாக மூச்சுவிடுதலைப் போலத் தான்.

விஞ்ஞானம் - ஞானம் கண்ட உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டு வரும் பணியை விஞ்ஞானம் செய்கிறது.

உழைப்பு - ஆற்றலைத் தருவது ஆர்வம்; ஆர்வத்தைத் தருவது வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாறவேண்டும் இதுவே வாழ்வு.

அறியாமை - தனக்குரியதை விட்டுக்கொடுக்காமல், மற்றவர்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

காலம் - காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்கவேண்டும்.

திட்டம் - உலகின் சிறு சிறு நிகழ்வுகள் கூட திட்டமிட்டே நிகழ்கின்றன. ஆனால் மனிதன் திட்டமிட மறுக்கிறான்.

மனிதன் - மூடிவைக்காத பதார்த்தம் கெட்டுப் போகும். கண்காணிக்காத மனிதர்களும் கெட்டுப் போவார்கள்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். குன்றக்குடி ஆதீனத்தின் மடாதியாக இருந்தவர்.

Read More...

Achievements

+15 more
View All