Share this book with your friends

Ethirneechal / எதிர்நீச்சல் Naan Veezhven Endru Ninaithaayo...? /நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...?

Author Name: Agraharam SVR Sri Vasan Aiyer | Format: Paperback | Genre : Self-Help | Other Details

நான் இந்த புத்தகத்தை எழுதுவதற்கான முக்கிய காரணம் எனது வாழ்வில் நான் சந்தித்த மூன்று நபர்களின் மரணமே முதலாவது எனது அண்ணன். இரண்டாவது எனது அப்பா, மூன்றாவது கிட்டத் தட்ட மரணப் படுகையில் சென்று மீண்டும் புதிய மனிதனாய் பிறந்த நான்”.

நமது வாழ்கைக் காலம் மிகமிக குறுகியது. ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்று வாழும் மனிதர்களுள் என்னை ஒரு வெற்றியாளனாகப் படைத்திருக்கும் இறைவனுக்கு என் நன்றிகள்.


எனது மனம் எப்போதும் எதிலும் எல்லா உயிர்களின் மகிழ்ச்சியையும், சாதனைகளையும், அவர்களின் முன்னேற்றத்தையும் மட்டுமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும். இந்த எண்ணத்தையே என் சுதர்மாவாகவும், என் பிறவி பயனாகவும் கருதுகிறேன். இந்த எண்ணம் மேலோங்கி இருப்பதாலோ அல்லது பிறருக்கு உதவ நினைத்ததாலோ என்னவோ இப்புத்தகம் உருவாகியிருக்கிறது என நினைக்கிறேன்.


நிச்சயமாக என்னைப் பற்றிய சுயவிளம்பரமோ, என்னை நானே பெருமைபடுத்திக் கொள்ளவோ இப்புத்தகம் வெளியிடவில்லை என்பதை இந்த புத்தகத்தை படிக்கும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்புத்தகம் வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு  தனி மனிதனுக்கும் நிச்சயமாய் ஒரு வழிக்காட்டி நூலாக இருக்கும்.


தோல்விகளே எனது உற்சாகம், நான் பெற்ற வலிகளே என் மூலதனம். நாம் வாழும் காலங்களில் நாம் ஓடி ஓடிச் சேர்க்கும் செல்வம் உண்மையில் நிரந்தரமானது அல்ல. நாம் செய்யும் நல்ல செயல்களே நமது மனிதத் தன்மையின் அடையாளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்ற உண்மையை உணர்ந்தவன் நான்.

Read More...
Paperback
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அக்ரஹாரம் எஸ்விஆர் ஸ்ரீவாசன்ஐயர்

N/A

Read More...

Achievements

+4 more
View All