Share this book with your friends

FIVE STAR DHROGAM / ஃபைவ் ஸ்டார் துரோகம்

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இளம்  வருமானவரி அதிகாரிகளான சாதுர்யாவும் நித்திலனும் "ஆப்ரேஷன் ஆக்ட்டோபஸ்" என்ற சங்கேத பெயரில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் 500 கோடி ரூபாய்  கருப்பு பணத்திற்கான ஆதாரத்தையும் அதன் இருப்பிடத்தையும் தேடி அவரின் பண்ணை வீட்டுக்கு அவருக்கு தெரியாமலேயே  செல்கின்றனர். அவர் ரௌடியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு மோசமான அரசியல்வாதி மாறியவர் மற்றும் எதிரிகளை கொலை செய்ய சற்றும் தயங்காதவர் என்றும் அறிந்தும் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர்.

அங்கு ஆரம்பிக்கும் கதை, எதிர்பார்க்காத ஒரு கொலை நடப்பதில் இருந்து சூடு பிடிக்கிறது. அதன்பின நடக்கும்  சம்பவங்கள் அனைத்தும் திடுக்கிடும் திருப்பங்களுடன் பயணிக்கிறது. அதே பணத்தை தேடி சில சதிகார கும்பல்களும் அரசாங்கத்தை சார்ந்த சில துறைகளும் களம் இறங்குகின்றன. 

ஒரு கட்டத்தில் தொடர் மரணங்கள், கொலைகள் காரணமாக 

போலீஸ் துறையும் தன் பங்குக்கு விசாரணையை துவக்குகிறது.  

இந்த ஆட்டத்தில் நண்பர்கள் எதிரியாக மாறுகிறார்கள். எதிரிகள் நண்பர்களாக மாறுகிறார்கள். 

முடிவில் என்ன நடக்கிறது?

பரபரவென நாலா திசைகளிலும் பறக்கிறது அதிரடி அரசியல்  கதை.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All