Share this book with your friends

GAVANIKAPADATHA KAAVIYA PENGAL / கவனிக்கப்படாத காவியப்பெண்கள்

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

கைகேயி

இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது.  மகிழ்ந்தது சுற்றமும் நட்பும் மக்கள் குதூகலித்தனர்.  ‘ஆர்த்தனர் களித்தனர் ஆடிப்பாடினர்.’ அரசியல் சதுரங்கத்தில் அவசரமாய் காய்கள் நகர்த்தப்பட்டன.  பரதன் நாடாள்வான்.  ராமன் காட்டுக்குப் போக வேண்டும்’ என்று அடுத்த அறிவிப்பு வந்தது.  இதற்கெல்லாம் காரணம் கைகேயி என்ற விளக்கமும் கூடவே வந்தது.

ராமன் அரசனாகப் போகிறான் என்ற செய்தி அயோத்தி நகரத்துக்கே இனித்தது.  ஒருத்திக்கு மட்டும் வலித்தது.  அவள் கூனி. மந்தரை, கைகேயின் தாதி.

குணத்தால், குழந்தையும் தெய்வமும் ஒன்று.  குழந்தை ராமன் நிஜமாகவே தெய்வம்.  ஆகையால், மந்தரையின் கூனில் மண் உருண்டையால் அடித்தான்.  குற்றம் புரிந்தான்.  இது அறியாப் பருவத்து விளையாட்டு.. இது குற்றமில்லை என்றால்… தாடகை வதம் சந்தேகத்துக்கு உள்ளாகும்.

சட்டப்படி பார்த்தாலும், தர்மப்படி பார்த்தாலும் குற்றத்துக்கு தண்டனை உண்டே உண்டு.  கைகேயின் தாதி என்ற அந்தஸ்தை தவிர,  வேறு அதிகாரம் இல்லாத கூனி ராமனை பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தாள்.  வாய்த்தது வாய்ப்பு.  காய் நகர்த்த அந்தப்புரம் வந்தாள்.

அப்போது கைகேயி உறக்கத்தில் இருந்தாள்.  கால்தொட்டு எழுப்பினாள் கூனி.  கணவன் தசரதன் கண் கண்ட தெய்வமென்றும், கோசலை மைந்தன் ராமன் தனக்கு முதல் மகன் என்றும் எண்ணி வாழும் கைகேயி எண்ணத்தில் கரையானாய் புகுந்தாள்.  அரிக்கத் தொடங்கினாள்.

கூனியின் ஆசைக்கு அத்தனை சீக்கிரமாய் ஒன்றும் கைகேயி தலையாட்டி விடவில்லை.  அதற்கு கூனி நிறைய பாடுபட வேண்டியிருந்தது.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All