Share this book with your friends

GREEKS / கிரேக்கம்

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

கிரேக்கம்: 1.பண்புகள் 2. ஒலிம்பிக் விளையாட்டு ஆகிய இரு நூல்கள் அடங்கியது

தியாமட் என்ற சமுத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு, அவளுடைய குழந்தைகள் மேல் மகா கோபம் ஏனென்றால், அந்தக் குழந்தைகள் சதா சத்தமிட்டுக் கொண்டிருந்தன. தொந்தரவு தந்து கொண்டிருந்தன. அதனால், சமுத்திரத்தாய், தன் குழந்தைகளை அழித்து விடவேண்டுமென்று ஆத்திரத்துடன் முடிவு செய்தாள்.

தங்களுடைய தாயின் சதித்திட்டத்தைத் தெரிந்து கொண்ட குழந்தைகள், தாயை எதிர்த்தன. தாக்கின. ஆனாலும், தாயின் கோபம் முன்னே அவர்களால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. அவர்கள் தோற்றுப் பின்னோடினார்கள்.

குழந்தைகளின் கடைசியானவன் மார்டக் (Marduk) என்பவன் அவன் எப்படியும் தன் தாயை வென்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். கடவுளர்களை வேண்டிக் கொண்டு, தன்னுடைய இலட்சியம் வெற்றி பெறத் துணை கோரினான்.

கடவுளர்களும் கருணையுடன் செவிமடுத்து, உதவினர் புதிய சக்திகள் அவனுக்கு மாயமாக வந்துசேர்ந்தன. இறுதியாக, எல்லை இல்லா ஆற்றல் உடைய சமுத்திரத்தாயை வென்று வீழ்த்தினான் மகனாகிய மார்டக்.

தன் தாயின் உடலை, மீனை இரண்டாகக் கிழிப்பது போல, கிழித்தான். மேலும் கீழுமாக எறிந்தான். மேலே எறிந்த பகுதி வானமாயிற்று. கீழே விழுந்த பகுதி பூமியாயிற்று.

பூமியிலே இரண்டு ஆறுகள் - அவள் கண்களிலிருந்து ஆறாகப் பெருகி ஓடின. அவற்றிற்கு டைக்ரிஸ், எபரேடஸ் என்று பெயர்...

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All