Share this book with your friends

IN THE MEMEORIES OF Ki. Ra. 2021.05.17 / கி.ரா.நினைவாக: 2021.05.17

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தாத்தனுடன் ஒரு மாலைப்பொழுது- மனுஷி
தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களை இன்று அவரது வீட்டில் சந்திக்கச் சென்றேன். அவர் சொன்னது போலவே மிகச் சரியாக மாலை 4 மணிக்கு வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தினேன். கையில் ஏதோவொரு நூலை வைத்து வாசித்துக் கொண்டிருந்தவர் புன்னகையுடன் வரவேற்றார். அந்தப் புன்னகையே பெரும் ஆறுதலையும் தெம்பையும் தந்தது. அதற்குக் காரணம் உண்டு.
அவரை முதன்முதலாகச் சந்தித்த அனுபவம் மிகவும் கசப்பானது. அவரது கதைகளை வாசித்திருக்கிறேன். (அவர் தொகுத்த பாலியல் கதைகள் உட்பட). அவரைப் பற்றிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். ’தளம்’ மொழி சிறப்பிதழுக்காக அவரோடு ஒரு கலந்துரையாடலுக்காக அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். பெரிதாக ஒரு வரவேற்பும் இல்லை. கடுகளவும் அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏன் வந்தீர்கள் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்பதை மிக வெளிப்படையாகச் சொன்னார். என்னைக் கவிஞர் என்று அறிமுகப் படுத்தி இருந்தது அதற்குக் காரணம். கவிதையை ஒரு இராட்சசன் என்று திட்டினார் கலந்துரையாடலின் போது. கவிஞர்களை வெறுத்தார்.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் புலிகள் வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All