Share this book with your friends

INNORU URIMAI (Short Stories) / இன்னொரு உரிமை சிறுகதைகள்

Author Name: Su. Samudram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள எந்தக் கதை யைப் படித்தாலும், கதை படிக்கிறோம் என்ற எண்ணமே நமக்கு எழவில்லை. அவர் கதைகளின் பாத்திரங்களும் சம்பவங்களும், நம்மைச் சுற்றியோ, நாமாகவோ கூட இருக்கிறோமோ என்ற எண்ணமே நமக்கு ஏற்படுத்தும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களை இகழ்வதையும், இம்சிப்பதையும், வலியவர்கள் மெலியவர்களைச் சுரண்டுவதையும், பகிரங்கமான கிண்டலோடும், மறைமுகமான எதிர்ப்புக் குரலோடும் இவர் பாத்திரங்கள் உலா வரும்.

ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு அசாத்திய அசத்தல் தெரியும். சில கதைகளின் முடிவுகள் நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது. ‘’நெஞ்சு பொருக்குதில்லையே‘’ என்ற பாரதியின் வெஞ்சினமும்,'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் நெஞ்சிரக்கமும் இவர் கதைகளில் கிறைந்திருக்கின்றன.

இவர் பாத்திரங்கள் வட்டாரத் தமிழில் பேசுவது தான் படிப்பதற்குக் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஒருவேளை இந்த வட்டார நடையே தம் வெற்றிக்குக் காரணம் என்று இவர் கினைக்கிறாரோ என்னவோ!

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு.சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்

Read More...

Achievements

+15 more
View All