You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசத்யஜித் ராய். இந்த மேதையின் பெயரை சொன்னவுடன் திரைப்பட ரசிகர்களின் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்து போகும். அவரது படங்கள், உலக அளவில் இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த முகவரி, இவற்றை குறித்து பேசிப் பேசி ஒவ்வொரு மொழியும் ஓய்ந்து போயிருக்கும். ஆனால், அவருக்குள் இருந்த இசைக் கலைஞன் பற்றிப் பலரும் அறியார்.
திரைப்படத்தையும் இசையையும் பெரிதும் நேசித்தவர் ராய். சொல்லப்போனால், திரைப்படத்தை விடவும் இசையின் மீதான அவருடைய காதல் பல மடங்கு அதிகம். சிறு வயதிலிருந்தே வங்காளப் பாடல்களையும், பிரம்ம சமாஜ மந்திரங்களையும் கேட்டு வளர்ந்த ராய், வேத மந்திரங்களையும், தாகூரின் கவிதைகளையும் விஞ்சி நிற்கும் கவித்துவப் புள்ளியை தேடி அலைந்தார். அவரது தேடல் மேற்கத்திய செவ்வியல் இசையில் முடிவடைந்ததாகக் கருதினார். “வங்காள இளைஞர்கள் அனைவரும் கவிதைகள் புனைந்த அதே காலகட்டத்தில், நான் ஐரோப்பிய செவ்வியல் இசையை கேட்டுக் கொண்டிருந்தேன்”, என்கிறார் ராய்.
காப்பியா வாசிப்பகம்
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.