Share this book with your friends

ISAIRAASAA / இசைராசா

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Music & Entertainment | Other Details

கிறிஸ்தவராக பிறந்து ஹிந்துவாக மத மாற்றம்:
இளையராஜா கிறிஸ்தவராக பிறந்தவர். அதன் பிறகு ஹிந்துவாக மதம் மாறினார். அவரது மகன் யுவன் ஷங்கர்ர் ராஜா சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியராக மதம் மாறினார். இளையராஜாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ரமணா மகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகையை வழிபடுவார் அவர்.

இசை குறிப்புக்கள் எழுதி அதை வாசிப்பவர்:

ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே இசை குறிப்புகள் எழுதி அதன் பின்பு அதை வாசிப்பார்கள். அதில் இளையராஜாவும் ஒருவர். அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா கூட அப்படி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையை பயன்படுத்தி தான் இவ்வளவு பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா.

இளையராஜா இசையில் பாட மறுத்த எல்.ஆர்.ஈஸ்வரி

இளையராஜா ஆரம்ப காலத்தில் இருந்தபோது அவர் ஒரு பாடலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியை பாட கேட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் பின் இளையராஜா இல்லாத தமிழ் படங்களே இல்லை என்கிற காலகட்டத்தில் அவர் ஒருமுறை கூட எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு இணையான கட்டவுட்:

முரட்டு காளை படத்தின் ரிலீஸ் சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இணையாக இளையராஜாவுக்கும் ஒரு பெரிய கட்டவுட் வைத்திருந்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தவர் அவர்.

:தற்போது இளையராஜா எப்போதும் வெள்ளை நிற குர்தா தான் அணிந்திருப்பார். ஆனால் ஆரம்ப காலத்தில் விலையுயர்ந்த உடைகளை அதிகம் அணிவதில் ஆர்வம் காட்டினார் அவர்.

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுகள் தான். அதை வா:ங்குவது பலருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் இளையராஜா இரண்டு முறை பல்வேறு காரணங்களால் தனக்கு கிடைத்த தேசிய விருதை நிராகரித்து இருக்கிறார்.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் புலிகள் வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All