You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநெறிப்படுத்தவே தவிர வெறிப்படுத்த அல்ல
உலகத்துச் சமயங்கள் அனைத்துமே அன்பையே போதிக்கின்றன. ‘அன்பின் வழியது உயர் நிலை’ என்பது தான் சமயங்களின் உயிரோட்டமான கருத்து. மனித நேயம் போற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில், ‘மனிதன் இறையம்சமானவன்’ என இஸ்லாம் போதிப்பதைப் போல உலகச் சமயங்கள் பலவும் எடுத்தோதுகின்றன. ஆனால், அதற்குப் புறம்பான முறையில் மத நடவடிக்கைகள் அமைகின்றனவென்றால் அதற்கு மதம் காரணம் அல்ல. அந்த மதத்தை வழி நடத்துவதாகக் கூறி கொள்ளும் போலிச் சமயவாதிகளும் சமயப் போர்வையில் சுய லாபம் தேடியலையும் சுய நலக் கும்பல்களுமே காரணமாகும். சமய நெறிக்குப் புறம்பாக மக்களுக்கு மதவெறியைப் புகட்டி சமயத்தின் உன்னதத்தையே உருக்குலைத்து விடுகிறார்கள். இத்தகைய சமூக விரோதிகளை இனங்கண்டு ஒதுக்குவதன் மூலமே உண்மைச் சமயத்தின் உன்னதத்தை நிலை நாட்ட முடியும் என்பதை நாம் உணர்ந்து தெளிய வேண்டும்.
மேலும், மக்களுக்கு அவரவர் சமயத்தின் உண்மைத் தத்துவங்களை, கொள்கை கோட்பாடுகளை உரிய முறையில் உணர்த்துவதன் மூலம் அனாவசியமான ஐயப்பாடுகளை நீக்கி மனித உள்ளங்களை நெருக்கமடையச் செய்ய முடியும்.
மணவை முஸ்தபா
மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்
The items in your Cart will be deleted, click ok to proceed.