Share this book with your friends

Kaatril Vantha Kavithai / காற்றில் வந்த கவிதை நாடோடிப் பாடல்கள்: கதையும் பாட்டும்

Author Name: Periyasamithooran | Format: Paperback | Genre : Music & Entertainment | Other Details

காற்றிலே நறுமணம் மிதந்து வருகிறது; பறவைகளின் ஒலி வருகிறது; பாட்டும் மிதந்து வருகிறது. ஒலி பெருக்கியின் வல்லமையால் பெரிய வடிவம் எடுத்து வருகின்ற பாட்டை நான் இங்கே குறிப்பிடவில்லை. கழனிகளின் இடையிலே, நாட்டுப் புறத்திலே, வேலை செய்யும் இடத்திலே கள்ளங்கபடமற்ற எளிய உள்ளங்களின் துடிப்பாக வருகின்ற எளிய பாடல்களைப் பற்றியே இங்கு பேசுகின்றேன்.

⁠நாடோடிப் பாடல்கள் ஒவ்வொரு நாட்டின் தனி உடைமை. அவை அந்த நாட்டின் ஆணிவேராக நிற்கும் மக்களின் பண்பையும் ஆர்வத்தையும் மனப்போக்கையும் நிலையையும் பிரதிபலிக்கின்றன.

⁠இந்தப் பாடல்களை யார் உண்டாக்கினார்கள் என்று கூற முடியாது. இவை எப்படியோ தோன்றி நாடெங்கும் உலவுகின்றன.

⁠இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாடோடிப் பாடல்களை நான் பல ஆண்டுகளாக முயன்று சேகரித்தேன். எங்கள் ஊர் ஒரு கிராமம். அங்கே செல்லும்போதெல்லாம் சில பாடல்கள் எனக்குக் கிடைக்கும்.

ஆசிரியர்

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பெரியசாமித்தூரன்

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார்.

Read More...

Achievements

+15 more
View All