You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதிருக்குறள் கதைகள் 100 மற்றும் அறிவியல் திருவள்ளுவம் அடங்கிய நூல்.
மனம் பொறிவழிகளிற் செல்லாதபடி தடுத்துத் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்துப் பிறர்க்குரிய நன்மைகளைச் செய்தல்
சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தை அடைந்து வயிற்றுவலி நீங்கி வீரட்டானத்துறையும் அம்மானுக்கு அடிமை ஆனார் நாவுக்கரசர். இவ்விதம் அடிமை பூண்டு இவர் தவம் செய்தார். அச் சமயம், சமணர்கள் நீற்றறையிலிட்டார்கள்; சாகாததுகண்டு நஞ்சுகலந்த சோற்றை உண்ணச்செய்தார்கள்; மேலும் உயிரோடு இருக்கக் குழியில் புதைத்து யானையைவிட்டு மிதிக்கச்செய்தார்கள்; பின் கல்லோடுகட்டிக் கடலிலும் போட்டார்கள். இவ்விதம் தவம்செய்யும் இவருக்கு மேலும் மேலும் துன்பம் வந்து வருத்தியதால் இவர் உண்மை ஞான ஒளியை அடைந்தார். இவ்வொளிக்குப் பயந்து துன்பம் செய்த மகேந்திரபல்லவனும் சைவனாகி இவர் பாதத்தை வணங்கி வழிபட்டு வாழலானான். வள்ளுவரும் “புடத்தில் வைத்துச் சுடச்சுடப் பிரகாசிக்கும் பொன்னைப்போல துன்பம் மேலும் மேலும் வந்து வருத்த தவம் செய்பவர்க்கு ஞான ஒளி வீசும்” என்று கூறியுள்ளார்.
சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும்; துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு.
சுடச் சுடரும் = (புடத்தில் வைத்து) – சுடச் சுடப் பிரகாசிக்கும்
பொன் போல் = பொன்னைப் போல
நோக்கிற்பவர்க்கு = தவம் செய்ய வல்லவர்க்கு
துன்பம் = அதனால் ஏற்படும் துன்பம்
சுடச் சுட = வருத்த, வருத்த
ஒளிவிடும் = அறிவுஒளி மிகுந்து விளங்கும்.
கருத்து : துன்பம் மிக, மிக வருத்தினால் தவம் செய் வோர்க்கு அறிவுமிகும்.
கேள்வி: “சுடச்சுடரும் பொன் போல்” என்ற உவமை விளக்கும் நீதி என்ன?
காப்பியா வாசிப்பகம்
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.