Share this book with your friends

KARUNAAGAPURA GRAMAM - SIVAPPIN NIRAM KARUPPU / கருநாகபுர கிராமம் - சிவப்பின் நிறம் கருப்பு

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கருநாகபுர கிராமம்

கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது  அந்த வழக்கு.

இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம்  அறிந்தே  கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், சந்தோஷ். 

விசாரணை ஆரம்பித்த சில மணிநேரத்திலேயே சந்தோஷூக்கு அமானுஷ்யமான, ஆச்சரியமான நிகழ்வுகள் மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் நடக்கின்றன. 

கருநாக சித்தரின் சாபம், கலியுகன் மற்றும் கலியுகம் பற்றிய கதைகள் என அவர் கேள்விபடும் விஷயங்கள் எல்லாமே,  மேலும் மேலும் விசாரணையின் கோணத்தை 
திசை மாறச் செய்கிறது.இவற்றையெல்லாம் நம்பலாமா இல்லை நம்பக்கூடாதா 
என தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் உண்மைதன்மை அறிய போராடுகிறார். 

அந்த போராட்டம், அதன் விளைவுகள், உங்களை திடுக்கிட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சிவப்பின் நிறம் கருப்பு

நெடுஞ்சாலையில் சாலை விபத்தால் காயமடைந்த நபரைப் பற்றி போலீஸ்க்கு தெரிவிக்கிறாள், துணிச்சல் மிகுந்த இளம் பெண்டாக்டர் அருணா. ஆனால், அதுவே பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்.

விபத்தில் சிக்கிய நபருக்கும் அருணாவுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் கிடைக்கின்றன. அதை மறுக்கிறாள் அருணா. ஆனால், காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அவளை நோக்கி பாய்கிறது.

அதே நேரத்தில்,வித்தியாசமான முறையில்  தொடர் கொலைகள் நடக்கின்றன. அது காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது. அதன் ஆதியும் அந்தமும் புரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்கிறார்கள். 

குற்றவாளி யார் என அறியும்போது நீங்கள் அதிர்ச்சியில் மீள சிலமணிநேரம் ஆகலாம்.

Read More...
Paperback
Paperback 240

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All