Share this book with your friends

Kattu(rai)soru / கட்டு(ரை)ச்சோறு (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு)

Author Name: N. Amirudeen Hasani | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

சங்க இலக்கியம் மற்றும் இக்கால இலக்கியம் தொடர்பான பதின்மூன்று ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நற்றிணைசார்ந்த கட்டுரைகள் அதிகமாக உள்ளன. இஸ்லாமியச் சிறுகதை குறித்த கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும். 

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நி. அமிருதீன் ஹசனி

‘இலைகளின் மௌனம் கவிதைகளாய்’ என்னும் கவிதை நூலின் வாயிலாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் நி.அமிருதீன் ஹசனி  அவர்கள். கட்டு(ரை)ச் சோறு  இவருடைய இரண்டாவது நூலாகும்.

 இவர் எழுதிய செல்வி என்ற நர்ஸக்கா சிறுகதை பரவலாக மின் இதழ்களின் கவனம் பெற்ற கதையாகும். 2019 ஆம் ஆண்டு புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் இச்சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. 

‘இனிய திசைகள்’ இதழில் வெளிவந்த இவருடைய ‘இரக்கம்’ கதை வாசகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றது. பள்ளி மாணவர் பருவம் தொடங்கி கட்டுரை, கவிதை, சிறுகதை, மேடைப்பேச்சு எனப் பல துறை சார்ந்த திறமைகளை வெளிப்படுத்திப் பரிசுகள் பலவற்றை இவர் பெற்றுள்ளார். 

தற்போது திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திரு நி.அமிருதீன் ஹசனி அவர்கள் கல்விப் புலம் சார்ந்த பங்களிப்புகள் பலவற்றிற்கும் உரியவர். சர்வதேச ஆய்விதழ்களில் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டளவிலான, தேசிய அளவிலானக் கருத்தரங்குகளில் இவர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், உருது, அறபி எனப் பன்மொழித்திறன் வாய்ந்த இவர் ‘நற்றிணையில் அஃறிணைக் கூறுகள்’ என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

Read More...

Achievements

+2 more
View All