Share this book with your friends

Kuyili Mahangal Naangal / குயிலி மகன்கள் நாங்கள் மண்ணின் கதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : True Stories | Other Details

யுத்தமும் தமிழ்ப் பெண்களும் : மனோ-யாழ்ப்பாணம்
யுத்தம் நடைபெறும் நாடு, பிரதேசம், காலம் என்ற வேறுபாடில்லாது, அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறுவர்களுமாகவே இருக்கிறார்கள்.யுத்தப் பிரதேசத்தில் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதுடன் மாத்திரமல்லாது ஒரு யுத்த தளபாடம் போல் பயன்படுத்தப்படுகிறார்கள். தனியார் நிலவுடைமை ஆட்சி அதிகாரம் ஆரம்பித்த மன்னர் காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைபெற்ற அனைத்து போர்களிலும், பெண்கள் போரில் பங்குபற்றினாலும் இல்லாவிட்டாலும் காலத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களிலும் பெண்களே யுத்தத்தின் பாதிப்பை அதிகமாக அனுபவிப்பவர்களாக இருந்துவருகிறார்கள், யுத்தத்தின் உச்சமான துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் ஆட்சி அதிகார சிந்தனையில் மாற்றம் இல்லையா? அல்லது அநேகமான போர்களை ஆண்களே நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்பதா? அல்லது பெண்கள் போரை எதிர்கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதா? எது காரணம்?

Read More...
Paperback
Paperback 1099

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All