Share this book with your friends

Maarxsiya Azhagiyal / மார்க்சீய அழகியல்

Author Name: Na.vanamamalai | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

மார்க்சீயம் இன்று மறக்க முடியாத அடிப்படைத் தத்துவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை அறியவும் பயிலவும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பயன் கொள்ளவும் பெரும்பான்மை மக்கள்-குறிப்பாக வளரும் நாடுகளில் வாழ்வோர் விழைகின்றனர்.

மனிதனது நலத்துக்கும் உயர்வுக்கும் உலக அமைதிக்கும் துணையாகவும், அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் எதிராகவும் பயன்படும் இந்த மாபெரும் தத்துவத்தின் தாக்கம் இன்று வளர்ந்து வலுப்பட்டிருக்கிறது.

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரது அடிப்படை நூல்களைக் கற்பதோடு, வரலாற்றின் வளர்ச்சிக்கேற்ப அவர் தனது தத்துவக் கருத்துக்களின் பின்னணியோடு விரிவான விளக்க நூல்கனைக் கொண்டு வருவது, தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் போராடும் மக்களுக்குத் தூண்டுகோலாக அமையும். தங்கள் போராட்ட உணர்வை நெறிப்படுத்திக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

மார்க்‌சீயத்தின் தத்துவக் கருத்துக்கள், வரலாற்றுக் கண்ணோட்டம், சமூகப்பார்வை, பொருளாதார நோக்கு, கலை இலக்கிய மதிப்பீடுகள் என்று அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய இவை மனிதனது வாழ்க்கை நலத்துக்கும் சிந்தனை வளத்துக்கும் அடிப்படைகளை அமைத்து மனிதனை உருவாக்கும் உன்னதப் பணியை நிறைவேற்றுகின்றன.

மார்க்சீயத்தின் இத்தகைய அடிப்படைக் கூறுகள் அனைத்தையும் பற்றிய நூல்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன-வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழில் இத்தகைய நூல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் மார்க்சீயத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகளைப் பற்றிய நூல்கள் எழுதியிருக்கிறார்கள். தாமரையில் அவர்கள் எழுதி வந்த மார்க்சீய அழகியல் என்ற தொடர் தற்போது நூல் உருவம் பெறுகின்றது.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நா. வானமாமலை

நா. வானமாமலை (1917 - 1980), திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் . தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிசுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.இவர் தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்குவதற்காக 1969-ல் ஆராய்ச்சி என்னும் ஆய்விதழைத் தொடங்கினார்.

Read More...

Achievements

+15 more
View All