You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமனித வாழ்க்கை ஒருமுறை தான்! இந்த ஒரேயொரு வாழ்க்கையில் மனிதன் தனக்கென மட்டும் வாழாமல் பிறருக்காக உழைப்பது, வாழ்வது என்பது ஒரு போற்றத் தகுந்த தியாகம்! பிறர் நலம் போற்றும் பெருமான்கள் எண்ணிக்கையில் வெகு சொற்பமாக இருந்தாலும் அவர்களால் தான் மனுக்குலம் இன்னும் மண்ணில் தழைக்கிறது! வெகு ஜனங்களால் செய்ய இயலாத பொதுநலச் செயல்களை சில மனிதர்கள் செய்து விடும்போது அதை சாதனை என்று மனுக்குல வரலாறு தன்னுள் பதிவு செய்துகொள்கிறது! சாதனைகள் சிறியதா பெரியதா என்பது முக்கியமல்ல; அது பிறர் வாழ்க்கையில் என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியம்! அவ்விதம் ஆயிரங்கள் மத்தியில் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அவர்களின் வாழ்வில் வாழ்விடங்களில் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த ஒரு சாதனை மனிதரைப் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்! வாருங்கள், வாசித்துப் பார்ப்போம். யார் கண்டது? உங்கள் எதிர்காலத்திற்கான தேடலில் ஒரு புதையலைப் போல உங்களுக்கான பதில் இங்கு பொதிந்து கிடக்கலாம்!
V. புனிதன்
இந்நூலின் ஆசிரியர் திரு. V. புனிதன் அவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர். தமிழ் மீது உள்ள மாறாப் பற்றினால் இலக்கியத்திற்கான முதுகலைப் பட்டமும் M. A . (Tamil), கிறிஸ்தவ இறையியலில் இளங்கலைப் பட்டமும் (B. Th) பெற்றவர். இவர் தமிழகத்தின் பிரபல வார, மாத இதழ்களில் ஏராளமான கதை, கவிதை,சிறுகதை, கட்டுரை மற்றும் பல்சுவைத் துணுக்குகளை எழுதி வந்தார். ஆனால் தற்போது கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்தவ இலக்கிய மற்றும் நற்செய்தி இதழ்களில் இறைவன் தனக்களித்த நல்ல சிந்தனைகளைப் படைப்பாக்கம் செய்து வருகிறார்! தற்கால கிறிஸ்தவ இலக்கிய உலகில் இவரது எழுத்துக்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என்பதை இப்புத்தகம் வாசிப்போர் ஒப்புக்கொள்வார்கள்.
The items in your Cart will be deleted, click ok to proceed.