Share this book with your friends

Manidha Inamum Aanmeegamum / மனித இனமும் ஆன்மீகமும் Aanmeegathai Pattriya Aazhntha Purithalgal / ஆன்மீகத்தை பற்றிய ஆழ்ந்த புரிதல்கள்

Author Name: L. Vinodh Kumar | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

சுமார் 27 ஆண்டு கால தேடலின் பதில். சான்றுடன் கூடிய பல உண்மைகள். பல கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகள் இதோ:

 

1) மனிதன் கடவுளால் படைக்கப்பட்டானா? அல்லது குரங்கிலிருந்து

பரிணாமம் அடைந்ததானா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டானா? 

 

2) இன்றைய மனித இனம் படைத்தவனால் கைவிடப்பட்ட இனம். ஏன்? எதற்காக? 

 

3) மனிதனுக்கு நாகரிகத்தை போதித்தவர்கள் நாகர்கள் (Repteliens) உண்மையா?

 

4) மனிதனை படைத்தவர்கள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?

 

5) அகர்த்தா என்னும் பாதாள உலகம். அங்கு யார் இருக்கிறார்கள்? பாதாள உலகத்திற்கு செல்லும் பாதை எங்கு உள்ளது?

 

6) மும்மூர்த்திகள், அனுனாக்கி, இல்லோஹிம், எல்லோஜிம், இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்?

 

7) பல லட்சம் வருடம் வளராத மனித பரிணாம வளர்ச்சி, கடந்த 5000 வருடத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்ததற்கு காரணம் என்ன? ஏன்? எதனால்? யாரால்?

 

8) இந்த மனித இனம் அழிக்கப்படுமா எதற்காக? யாரால்?

 

9) நமது முன்னோர்கள், எகிப்தியர்கள், மாயன்கள் போன்றவர்கள் அழிந்ததற்கு காரணம் என்ன?

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

L. வினோத் குமார்

ஆசிரியர் திரு.ல.வினோத்குமார் அவர்கள், சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டையில், 16-6-1977ஆம் ஆண்டு திரு.தா.லட்சுமிகாந்தன் மற்றும் திருமதி.ல.கஸ்தூரி அம்மாள் அவர்களுக்கு, மூத்த மகனாகப் பிறந்தார். சென்னை, அரும்பாக்கம், D.G.Vaishnav College இல், 1998ஆம் ஆண்டு B.Com பட்டப்படிப்பும், சென்னை University Of Madras, Marina Campus இல், 2000வது ஆண்டில் M.B.A பட்டப்படிப்பு முடித்தார். பட்டப்படிப்பு முடித்த ஆரம்பகாலத்தில், சில கம்பெனிகளில் வேலை செய்தாலும், தான் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி இருந்தது. அதனால், தான் வேலை செய்த இடங்களில், அவர்கள் அந்த கம்பெனியை எப்படி நிர்வாகம் செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து, நிர்வாகத்தை தெரிந்து கொண்டு, தங்களுடைய பரம்பரை தொழிலான அரிசி ஆலைகே, தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரம் பார்க்க வந்துவிட்டார். இவர் தன் இளம் வயதிலேயே பல பன்னாட்டு நிறுவனங்களுடன் வனிக பங்குதாரராக இருந்து தேசிய அளவில், பல சாதனைகளும், அங்கிகாரமும் பெற்றுள்ளார். மிகப்பெரிய வாகனப்பிரியரான  இவர், விதவிதமான Car மற்றும் Bikeஜ வாங்கி ஓட்டி மகிழ்வார், இவர் ஒரு சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு சிறந்த யோகா ஆசிரியர் மற்றும் Zenskar தற்காப்பு கலை பயிற்றுனர், இன்று பல தொழில்களுக்கு அதிபராக இருந்தாலும், 1995ஆம் ஆண்டு தன் தந்தை வழி தாத்தாவின் இறப்பால் ஏற்பட்ட பல கேள்விகளுக்கான பதிலாகவே இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

 

இந்தப் புத்தகத்தில், மனிதனுக்கும் இறைவனுக்குமான தொடர்பு பற்றியும், ஆதியில் மனிதன் எப்படி உருகினான்? என்பது பற்றியும், நடப்பு உலகத்தின் செயல்பாடுகள் பற்றியும், மிகக்கூர்ந்து கவனித்து, பல உண்மைகளை சான்றுடன் விளக்கியுள்ளார். இப்புத்தகத்தை படிப்பவர்களுக்கு இறைவன் யார்? என்பது பற்றியும், மனிதன் எப்படி உருகினான்? என்பது பற்றியும். இந்த உலகம் இப்பொழுது எங்கே? எப்படி? எதை நோக்கி? சென்று கொண்டிருக்கிறது, என்பது பற்றியும் தெளிவாக புரியும்.

 

இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும், படித்து, புரிந்து கொள்ள வேண்டிய, உண்மையை விளக்கும் புத்தகமாகும். இந்த "மனித இனமும் ஆன்மீகமும்".

Read More...

Achievements