Share this book with your friends

Manidha poriyiyal punidargal alladu manangetta marnam-3 / மனிதப் போரியியலின் புனிதர்கள் அல்லது மானங்கெட்ட மரணம்-3

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கபிலனின் 99 பூக்களை கதையாக, நாட்டுப்பாடலாக, உரைநடையாக எழுதும்போது போரியியல் வாழ்வும் புலம்பெயர்ந்த வாழ்வுமாக நகர்த்தும் வாழ்வைப் புறந்தள்ளிவிட்டு ஜனரஞ்ச மக்களின் ஆளுமைக்குள் பயணித்து விட என்னால் முடியவில்லை.போர் நடக்கும் இடத்தில் பூக்கள் பூத்திராமல் இல்லை.காயம் படாத பூக்களும் இல்லாமல் இல்லை.பனியில் நனைந்த பூக்கள் தன்னை நெருப்பிலிருந்து காத்துக் கொள்கிறோம் என கனவு காணலாம்.நெருப்பை நீர் கொண்டு அணைக்கும் பகுத்தறிவு போய், நீரில் நனைந்த பூக்களை தீச்சுவாலை கொண்டு நைந்து போன துணியைப் போல காட்சிப்படுத்தும் உலக நியதிகள் வாழுமிடமாகிப் போனது கற்புலகத்தின் மீது பற்றவைத்த நெருப்புகள்.பாடசாலைக் குழந்தைகள் பதுங்கு குழியில் வாழ்ந்து மறைந்த போது, கபிலன் காணாத மண் பூக்களே குழுப் பிணங்களை மறைத்தது.உலகை வேடிக்கை பார்த்து திரும்பியவனுக்கும், பாடிக்கை(பாடுதல்) அசைத்த குரல்களுக்கும், காற்றணைத்த பூக்களும் வெளிச்சம் தரும் சூரியகாந்திப் பூவும் அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.பாம்பிடமிருந்து தப்பியவனுக்கு வேம்பூ அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.சூரியன் திரைப்படத்தில் பூக்குழி இறங்க ஆடிக் கொண்டு வரும் கவுண்டமணி நெருப்பை பார்த்து அலறுவது போல எங்கள் குழந்தைப் பூக்களை பூக்குழியில் தூக்கி எறிந்துவிட்டு பூவும் அதுவே புதையலும் அதுவே என வசனம் பேசிய படைஞர்களையும் காண முடியும் இங்கே.துவக்கின் அனலில்கரைந்தவனை மேலும் கரைக்க புனலில் தூக்கி வீசிய போது, நீரில் முளைத்த பூக்கள் அஞ்சலி செலுத்திவிட்டு போனது.தரையிலிருந்து வானம் வரை சிதறியவனுக்கும் தென்னம் பூக்கள் பறந்து வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.எம் நிலத்தின் ஈகையர்களுக்கு இயற்கைதான் மரியாதையாக நிமிர்ந்து அஞ்சலி செலுத்தியதே...

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த் தேசன் இமயக்காப்பியன்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All