Share this book with your friends

Manidha Poriyiyalin punidargal allathu maanangketta marnam-1 / மனித போரியியலின் புனிதர்கள் அல்லது மானங்கெட்ட மரணம்-1.

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : True Stories | Other Details

கண்ணீரின் மொழிபெயர்ப்பும் வாசிப்பும்
செஞ்சோலை...

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில்*செஞ்சோலை*
சென்ற பள்ளி மாணவிகள் இல்லம் இருந்தது. போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான காப்பகம் இது. இதை விடுதலைப் புலிகள் நடத்தி வந்த நிலையில் இரண்டு நாள் முதல் உதவி சிகிச்சை பயிற்சி முகாம் நடந்தது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். செஞ்சோலை வளாகத்தில் 2006 8 13 அன்று இரவு எல்லா மாணவிகளும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் 2006 8 14 அன்று காலை 7 மணிக்கு செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையின் 4 விமானங்கள் குண்டு வீசின. இதில் 61 மாணவிகள் பலியாயினர்.
60 மாணவிகள் படுகாயமடைந்தனர். இரத்தம் சொட்டச்சொட்ட மாணவிகள் கிளிநொச்சி, முல்லைதீவு மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டனர். விமானப்படையின் இந்த தாக்குதல் மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல் ஆகும் என யூனிசெப் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ராஜபக்சேவோ விமானங்கள் குண்டு வீசிய இடம் அனாதை இல்லமல்ல விடுதலைப்புலிகளின் தங்குமிடம் தான் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்கு மாணவிகள் தங்கி இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் கொல்லப்பட்ட குழந்தைகளும் புலிகள்தான் என நாக்கூசாமல் சொன்னதால் சர்வதேச மனித ஆர்வலர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து...
பாலச்சந்திரன்...இவரை தன் வயதொத்தவர் என சுட்டுவிட்டாரா?

*இந்திபியா கொலைகளுக்கு முன்னாலும் பின்னாலும் மூளையில் ஓடும் திரைத் துளிகள்

இந்திய பிரதமராக சுமார் பதினாறு ஆண்டுகள் பதவி வகித்த இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டடார் அக்டோபர் 31ஆம் திகதி அன்று தில்லி சப்தர்ஜங் சாலையில்...

Read More...
Paperback
Paperback 1050

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

TAMIZHDESAN IMAYAKAPPIYAN

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All