Share this book with your friends

Marundhe Unavu / மருந்தே உணவு பாரம்பரியமும் ஆரோக்கியமும்/ Parambariyamum Aarokiyamum

Author Name: Thirumathi. L. Prema (Ammayi) | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

அந்நிய மொழி தேசத்தார் நம் நாட்டில் ஊடுருவி நமது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அவர்கள் உணவை நாம் கடைபிடித்ததால் நம் உடல்கூறும் முற்றிலும் மாறிவிட்டது. வியாதிகள் பெருகி, மருந்துகளும் அதிகரித்து, ஆயுளும் குறைந்து விட்டது. உடலில் எந்தவிதமான பிரச்சனைக்கு என்ன தீர்வு? சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கடைபிடித்த உணவு முறைகளில், மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட நம் உயிர் காக்கும் உணவுகள் என்ன? பாரம்பரிய உணவுகள்,  தானியங்கள், கீரைகள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பலன்கள் பற்றியும் முத்திரைகள் மூலம் உண்டாகும் உடல் நலன்களும், அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவற்றைக் கடைபிடித்து வாழ்தலும், உடல் நலனை காப்பாற்றுவதும் நம் கையில் உள்ளது. நோய்களை தீர்க்கும் உணவுகள், ரோகங்களை தீர்க்கும் உணவுகள், தமிழர்கள் வாழ்வியல் முறையில் பின்பற்றிய குறிப்புகள் பல உண்டு.

பல நாடுகள் தங்களின் பண்டைய உணவு கலாச்சாரத்தை பின்பற்றுகின்றன. சில படையெடுப்புகள் நம் உண்மையை அழித்திருந்தாலும், இயற்கை ஒருபோதும் நம்மை கைவிடவில்லை. அமைதியான மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை நடத்துவதற்கு நமது பண்டைய பாரம்பரிய ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைத் தொடர இன்னும்  இயற்கை நம்மை எதிர்பார்க்கிறது.

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமதி. எல். பிரேமா (அம்மாயி)

இந்நூலை இயற்றியது திருமதி. எல். பிரேமா. இவருடைய தந்தை  திரு. எம். கே. சுவாமி, தாயார் திருமதி. பேச்சியம்மாள் அவர்களுக்கு 1954ஆம் வருடம் ஆறாவது மகளாக கோயம்புத்தூரில் பிறந்தார். தந்தை சுதந்திர போராட்ட தியாகி. இவருடைய தந்தை “குடியரசு” மற்றும் “கைத்தறி” என்னும் பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருபது வருடங்கள் பத்திரிக்கை நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின்பு இவருக்கு திருமணம் ஆனது. கணவர் திரு. ஆர். லட்சுமணன் அவர்கள் தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலையில் பொறியாளராக பணியாற்றினார். இவர்களுக்கு இரண்டு பெண்கள், மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர்.

தனது 25வது வயதில் இருந்து உணவு சம்பந்தப்பட்ட குறிப்புகளையும்,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களையும், தன் அனுபவத்தில் தெரிந்து கொண்டதையும் எழுதி வந்துள்ளார். மற்றும் உடல் நலன் குறித்து பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். சமூகத்தில் உடல் சம்பந்தமான சிறு பிரச்சனைகளுக்கு கூட நிறைய மருந்துகள் சாப்பிடும் நிலைமையை பார்த்து எதிர்காலத்தில் மன நிம்மதியின்றி வாழும் சூழ்நிலையை இது உருவாக்குமோ என்று எண்ணினார்.

அதன் பொருட்டு கடந்த 35 ஆண்டு காலமாக தான் சேகரித்து வைத்த மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் உடல் நலன் குறித்த குறிப்புகள் அனைத்தும் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்று எண்ணினார். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படைப்பு. இக்குறிப்புகள் அனைத்தும் எல்லோருக்கும்  பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே இவருடைய மிகப் பெரிய ஆவல்.

 

Read More...

Achievements

+2 more
View All