Share this book with your friends

MARUTHANILA MANGAI / மருதநில மங்கை

Author Name: Kaa. Govindhan | Format: Paperback | Genre : Poetry | Other Details

சங்க இலக்கியம் பயிலத் தொடங்கிய நேரம். அதற்குத் துணை நிற்கும் என்பதால், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய தமிழ்ப் பொழிலைத் தொடர்ந்து படித்து வந்தேன். அதில், தோரமங்கலம் ஆசிரியர் வரத நஞ்சைப் பிள்ளையவர்கள் கலித்தொகைப் பாடல்களுக்கு அளித்து வந்த விளக்கப் பேருரை, அறிவுக்கு விருந்தளிக்கும் ஆழம் உடையதாய் அமைந் திருந்தது.

அதைப் படிக்கும் பொழுது, கலித்தொகையின் ஒவ்வொரு பாட்டின் கருப் பொருளும் எந்தச் சூழ்நிலையினைச் சுட்டி நிற்கிறது என்பதை விளக்கும் விரிவான உரையை முன்னுரையாக அளித்துப் பாடற் பொருளை விரித்துரைப்பதால், ஒவ்வொரு பாட்டின் பொருளையும் தெளிவாக உணர முடியும். ஒவ்வொரு பாட்டின் விளக்கமும் ஒரு சிறு கதைபோல் அமைந்து படிப்பவர்க்குச் சுவையூட்டுவதாயும் அமையும் என உணர்ந்தேன்.

அவ்வகையில் எழுதப்பட்ட கலிப்பாக்களில், மருதம் சார்ந்த கலிப்பாக்கள் முப்பத்தைந்தின் விளக்கம், “மருத நில மங்கை” என்ற பெயர் தாங்கி வெளிவருகிறது.

இந்த நூலினை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

அன்பன்,

கா. கோவிந்தன்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கா. கோவிந்தன்

புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915- சூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read More...

Achievements

+15 more
View All