Share this book with your friends

MULVAELIGAL (Novel) / முள்வேலிகள் நாவல்

Author Name: Na. Parthasarathy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இத் தொகுதியில் என்னுடைய இரண்டு நாவல்கள் (குறு நாவல்கள் என்ற பெயர்தான் உங்களுக்குப் பிடிக்குமானால் எனக்கும் ஆட்சேபணையில்லை) உள்ளன. ‘விரோத வெள்ளம் வடிந்தபின்’ ஒரு பகைமை முற்றிய மனம் நல்ல படி மாறுவதைச் சித்திரிக்கும் 'முள் வேலிகள்' என்ற நாவலும், அழகுள்ள ஆண்மகனைவிடச் சமூக உணர்வுள்ள ஓர் ஆண்பிள்ளையைத்தான் பெண் நேசிக்க முடியும் என்று கூறு கிற சுலட்சணாவை அறிமுகப்படுத்தும்-'சுலட்சணா காதலிக் கிறாள்' என்ற நாவலும் சேர்ந்தது இப்புத்தகம். அதாவது இரண்டு முழு நாவல்கள் அடங்கிய ஒரே புத்தகம்.

இவ்விரண்டு நாவல்களும் சில சில பக்கங்கள் வீதம் பல வாரங்கள் தொடராக வெளிவந்து பின்பு ஒன்றாக நூலாக்கியவை அல்ல. முழுமையாக எழுதப்பட்டு வெளி வந்து முழுமையாகவே இன்று புத்தக வடிவிலும் வருபவை.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

Read More...

Achievements

+15 more
View All