You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமுதல் பாகம்
--------------------------
முதல் பாகத்தில் 145 சிறுகதைகள். இரண்டாம் பாகத்தில் 146 முதல் 172 வரை அடங்கும்.
1946ல் ‘இளம்பூரணன்’ என்கிற புனை பெயரில் ஆரம்பித்து, வளவன், மணிவண்ணன், பொன்முடி, கூடலழகன் என்றெல்லாம் பெயர் சூடி 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். அவர் நா.பார்த்தசாரதி எனும் நா.பா.
குமரிமலர், கல்கி, விகடன், கலைமகள், அமுதசுரபி, தினமணிக்கதிர், தாமரை, சுதேசமித்ரன், உமா, கலாவல்லி, காதல், தமிழ்ப்பொழில், தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், கலாவல்லி போன்ற பற்பல இதழ்களில் சிறுகதைகள் எழுதினார் நா.பா.
ஒவ்வொரு கதையும் ஒரு சேதி சொல்லும். ஆசிரியர் உணர்ந்த அதே அனுபவத்தை அதே படிநிலையில் வாசகரும் உணரும் வண்ணம் சிறுகதைகளைச் செம்மையாகப் படைத்தவர் நா.பா.
அவர் சார்ந்திருந்த அரசியல் சித்தாந்தங்களின் தாக்கமும் அவர்தம் படைப்புக்களில் பிரதிபலிக்கின்றன.
அவர் தம் எழுத்தை வித்தை காட்டும் கருவியாக்கிவிடவில்லை. பகிர்ந்தளிக்கும் பக்குவத்துடன் அதே சமயம் வாசகரைக் கைகொடுத்து மேலுயர்த்திக் கரம் கோர்த்து நடைபயின்றிருக்கிறார் நா.பா. இக்கதைகளில்.
அவர்தம் இலக்கியக் கொள்கைகள், சிறுகதை பற்றிய அவரது நோக்கு நிலைகள் ஆகியவை அவர்தம் முன்னுரைகளிலிருந்து பகுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
நா.பா. மிகக் குறுகிய காலத்திலேயே அசுர சாதனைகள் புரிந்து விட்டு விடைபெற்றுக் கொண்டார்.
நா. பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
The items in your Cart will be deleted, click ok to proceed.