Share this book with your friends

NADIGAIYAR ULAGAM / நடிகையர் உலகம்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

“அன்னை”, “ராணி சம்யுக்தா” போன்ற பல படங்களில் சுமார் 100 பாடல்களுக்கு மேலாக பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் ரத்னமாலா. குறிப்பாக நகைச்சுவைப் பாடல்களில் ஏற்ற இறக்கத்தோடு குழைந்து பாடியது இவருக்கு பொருத்தமாக இருந்ததோடல்லாமல் நல்ல பெயரையும் இவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது.
சென்னை தியாராகராய நகரில் வசித்து வந்த இவரது வீட்டு வாசலில் “ரத்னமாலா கணேசன்” என்ற பெயர்ப் பலகையை மட்டும்தான் இவரால் போட முடிந்ததே தவிர ஊரறிய, உலகறிய தானும் சிவாஜி கணேசனின் மனைவிதான் என்று வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. ‘வெளிக்காட்ட முடியவில்லை’ என்று சொல்வதற்கு பதிலாக இவர் ‘வெளிக்காட்ட விரும்பவில்லை’ என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
“ரத்னமாலா கணேசன்” என்ற பெயரை வைத்து முதலில் எல்லோரும் ஜெமினி கணேசனைத்தான் சந்தேகித்தனர். காரணம் அப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் “காதல் மன்னனாக” வலம் வந்தவர் அவர்தான்.
ரவீந்தர் எழுதிய “இடிந்த கோயில்” நாடகத்தில் ரத்னமாலா நடிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே சிவாஜி கணேனுடன் நாடகக்குழுவில் இணைந்து “என் தங்கை”, “பராசக்தி” போன்ற நாடகங்களில் நடித்தவர் இவர்.
1957-ல் படங்களில் சிவாஜி கணேசன் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக “சிவாஜி நாடக மன்ற”த்தைத்தொடங்கி, “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை அரங்கேற்றினார். இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ஜக்கம்மா என்ற பாத்திரத்தில் ரத்னமாலா அவருடைய மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட நூறு முறை இந்த நாடகம் மேடை ஏறியது.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All