You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமுன் புதையுண்ட முத்தமிழ்ச் சிறப்பினை மன்பதைக்கு உணர்த்து தலையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு ஒவாது உஞற்றிய பாவலரேறு அவர்களின் செறிவுறு பாக்களையும் விரிவுறு விளக்கங்களையுந் தாங்கி வீறார்ந்து விளங்குவது நூறாசிரியம் என்னும் இந்நூல்:
தமிழின் விழுமிய இலக்கிய ஆக்கங்களான கழக நூல்களில் ஆய்வும் தோய்வும் உடைய அறிஞர் பெருமக்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்நூலைப் படித்த அளவில் விம்மிதமெய்திச் செம்மாப்புறுதல் உறுதி.
பாவலரேறு அவர்களின் அரிய படைப்புகளான இந்நூல் அகவல் களெல்லாம், இடைக்காலத்தே இறுக்கந் தளர்ந்து போன் யாப்பமைதிக்கும், பொக்காய்ப் போன சொல்லாட்சிக்கும், பொய்க்கோலம் பூண்ட புனைந்துரைகளுக்கும் மாறாக உணர்வழுத்தத்திற்கேற்ற செவ்விய யாப்பமைதியும், செஞ்சொற் செறிவும், நயத்தக்க நல்லணியும் கொண்டு, கற்பாரை ஈர்க்குந் திறத்தில் இணையற்று விளங்குகின்றன.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.
The items in your Cart will be deleted, click ok to proceed.