Share this book with your friends

OTHAKATTU KONAR / ஒத்தக்கட்டுக் கோனார் வடக்குமாசி வீதி கோனார்

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

திருமலைமன்னர் கடம்ப வனமாகிய மதுரையை ஸ்ரீசக்கரவடிவில் அமைத்து புதுப்பொலிவூட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் திருநெல்வேலி வட்டாரமானது பாளையக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த 'புதுநாட்டு இடையர்கள்' ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையினர்களாக வாழ்ந்து வந்தனர். 'சிறுதாலி' கட்டும் இப்பிரிவினருள் ஒரு பெண்ணானவள் தன் கணவனை இழந்து விதவையாகி விட்டால் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லை. இந்நிலையில் அங்குள்ள பாளையக்காரர் இடையர்களை அழைத்துக் கணவனை இழந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் விதவையாய் இருப்பது நல்லதில்லை. அவர்கள் மற்றவர்களைப் போல. மறுமணம் செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்துகிறார்.
'நாங்கள் அறுத்தால் கட்டமாட்டோம்' என்று சொல்லிப் பாளையக்காரர் அறிவுரையினை சிறுதாலி கட்டும் புதுநாட்டு இடையர்கள் ஏற்க மறுத்தனர்.


அங்கு வாழ்ந்த புதுநாட்டு இடையர்கள் பாளையக்காரர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தனர். அவ்வாண்டு வழக்கம் போல இடையர்கள் நெற்பயிர்களை அறுவடை செய்தனர். அறுவடை முடிந்ததும் இடையர்கள் நெற்பயிர்களைக் கட்டத்தொடங்கினர். அப்பொழுது பாளையக்காரர் 'அறுத்த பயிர்களை இடையர்கள் கட்டக்கூடாது' என்று ஆணை பிறப்பித்து விட்டார். காரணம் கேட்ட இடையர்க்கு "நீங்கள் தான் அறுத்தால் கட்டமாட்டோம் என்று சொன்னீர்களே! அதன்படியே நீங்கள் இப்பொழுது நெற்பயிர்களைக் கட்டவேண்டாம்" என்று பாளையக்காரர் விளக்கம் கூறினார்

Read More...
Paperback
Paperback 599

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

 காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All