Share this book with your friends

PALIGALIN KURAL (Short stories) / பலிகளின் குரல் சிறுகதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உலக விடுதலை வீரர்கள்
போரியல் கட்டுரைகள்
பாலஶ்தீனப்போர்
கிறிஶ் போர்
தூக்கும் கலை மரணமும்
போருழல் ஈழக்கதை
இன்னும் பிற கதைப்புகளோடு 500 (8.5X11) பக்க கதம்பம்

நாங்கள்

உன்னையும் என்னையும் போன்ற
இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்...
நம் சம காலத்தில்
உனக்கு தெரியுமா..?
.*உன் நாவிலும் என் நாவிலும்
நாள்தோறும் பேசும்
தாய் தமிழைத்தான் அவர்களும்
பேசினர்.
உன்னையும் என்னையும் போல்
அந்த இளம்பிள்ளைகள்
வானுயர்ந்த புகழ்மிக்க பல்கலைகழகங்களில்
பட்டம் பெற்றவர்கள் அல்ல...
.*வானத்தைவிடவும் புகழ்மிக்க இலட்சியங்களோடு அவர்கள் வாழ்ந்தனர்.
எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை.
ஆனால்
உன்னதமான ஒருவனை
அவர்கள் தலைவனாக கொண்டிருந்தனர்.
.
.*அவர்கள் பொறியியல் படித்தவர்கள் அல்ல.
மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப்பொருட்களிலிருந்து
முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
.*அவர்கள் மாலுமிகள் அல்ல.
கப்பலோட்டினர்...
அவர்கள் விமானிகள் அல்ல.
விமானம் இயக்கினர்...
அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல.
தத்துவமாகவே வாழ்ந்தனர்...
அவர்களில் பலர் பள்ளிப்படிப்பையே
முடித்தது கிடையாது.
ஆனாலும் அவர்களைப்போல் களத்தில்
யாரும் பாடம் கற்பிக்க முடியாது...
.*எந்த துறவியைவிடவும்
அவர்களுடைய துறவறம் உயர்ந்தது.
எந்த தவசிகளின் தவங்களை விடவும்
அவர்களின் விடுதலை தவம் உயர்ந்தது..
அவர்கள் ஒவ்வொரு நாளும்
அடிபட்டு வாழ்ந்தனர்.
ஒரு நாளும் அடிமையாய் வாழ்ந்ததில்லை...
*அவர்கள் இருந்தவரை
அவர்களுடைய மண்
அவர்களுடையதாக இருந்தது...
அவர்கள் இருந்தவரை
அவர்களுக்கென்று ஒரு தேசம் இருந்தது...
அவர்கள் மண் அவர்களிடம் இல்லாமல் போனபோது
அவர்கள் இந்த மண்ணிலேயே இல்லாமல் போயினர்.

Read More...
Paperback
Paperback 1399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All