Share this book with your friends

PARAIYARGAL PANPAATTAALARGAL / பறையர்கள் பண்பாட்டாளர்கள்

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

பறையர்கள் குறித்த 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
அடங்கிய தொகுப்பு

பறையி பெற்ற முதல் குழந்தை அக்னி ஹோத்ரி:-

இன்றைய கேரளாவில் பரவலாக அறியப்படும் நாட்டார் கதை ஒன்று உள்ளது, அது பறையி பெற்ற பன்னிரு குலம் என்பதாகும்.

அதாவது பறையி ஒருவரின் அறிவு திறமையை கண்டு வியந்த வரருசி என்ற பிராமணர் அவளை திருமணம் செய்துகொள்கின்றார், பிறகு அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்க... குழந்தைக்கு வாய் உள்ளதா என்று வரருசி கேட்கின்றார். ஆம் இருக்கு என்று பறையி சொன்னதும்... குழந்தையை விட்டுவிடு என்கின்றார் வரருசி, பிறகு குழந்தையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

இவ்வாறாக அவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்து அவை அனைத்தும் பன்னிரண்டு குலங்களாக மாறின என்பதே அந்த நாட்டார் கதையாகும்.

அதில் முதல் குழந்தை அக்னிஹோத்திரி என்ற மகனாகும்.

இதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் உள்ளது, வாய் பேச தெறிந்த குழந்தையை கைவிடுகின்றனர், அதை இவ்வாறாகவும் பார்க்கலாம்... ஒவ்வொரு குலமும் தங்களுக்கு என தனித்த அடையாளம் பெற்ற போது அவர்களின் தாய் பறையி என்பதை மறைத்துவிடுகின்றனர்.

Read More...
Paperback
Paperback 850

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All