You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபசி வேறு, பக்தி வேறு என்று பக்குவமடையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்த வரை லாபம் என்று கருதுவோர் அப்படிப்பட்ட சொற்றொடர்களை ஆங்காங்கே பிரயோகப்படுத்துகிறார்கள்; அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கிவிடக்கூடாது. எதையும் ஊன்றிப் படிக்கவேண்டும்; தவறான பொருளை எடுத்துக் கொண்டு ததிங்கிணதோம் போடக்கூடாது. பசியும் பக்தியும் ஒன்றே; இரண்டல்ல பசி முத்தினல் பக்திக்கு அவசிய மில்லை; புலன்கள் அனைத்தும்--ஏன், கடைசி மூச்சு உள்பட -தாமாகவே அடங்கிவிடும். 'தத்துவம் இதுவே!
'உண்மை’ என்னவென்றால் மண், விண், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம். இதனுள் வாழும் உயிர்களும் அப்படியே. பிறப்பினால் பஞ்ச பூதங்கள் சேருகின்றன; இறப்பினால் பஞ்ச பூதங்கள் பிரிகின்றன. அவ்வாறு பிரியும் மண் மண்ணோடும், விண் விண்ணோடும், நீர் நீரோடும், நெருப்பு நெருப்போடும், காற்று காற்றோடும் கலந்து எந்தச் சூன்யத்திலிருந்து மனிதன் வந்தானோ, அதே சூன்யத்தில் அவனைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகின்றன. இதற்குப் பின் இல்லாத ஒன்றைத்தான் மையமாக வைத்துப் பாவமென்றும் புண்ணியமென்றும், நரகமென்றும் மோட்சமென்றும் சொல்லி ஆசான்களும் அடியான்களும் கதைத்து வருகிறார்கள்.
விந்தன்
மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார் விந்தன். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.
The items in your Cart will be deleted, click ok to proceed.