Share this book with your friends

PULLIN ITHAZHGAL (Novel) / புல்லின் இதழ்கள் நாவல்

Author Name: K. P. Neelamani | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

டாக்டர் கலைஞரின் சிறப்புரை

காவிரியின் வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்து மண்ணில் நெல்லும் விளையும் புல்லும் விளையும்; அது போல இசையும் வாழ்வும் இரண்டறக் கலந்த இன்ப வெள்ளத்தைக் கொடுக்கும் பண்பும் இந்த மண்ணுக்கு உண்டு என்பதை நாடு நன்கறியும்.

“புல்லின் இதழ்கள்’ என்ற இந்தப் பெருங்கதையில் நண்பர் திரு. கே. பி. நீலமணி அவர்கள் தஞ்சையின் இசை மணத்தைத் தரம் குன்றாது தவழ விட்டுள் ளார்கள். இசையினை உயிர் மூச்சாகக் கருதி உயர் வாழ்வு நடத்தும் ஆசான் ஒருவர் ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு குடும்பச் சூறாவளியில் சிக்கிச் சுழல்வதையும்: அவரது மாணவன் ஒருவன் அதே போன்று இசை வெள் ளத்தில் அழுந்தி, அன்புச் சுழலில் சிக்கி, அமிழ்ந்து, தக்க தருணத்தில் நீந்தி, இறுதியில் வெற்றிகரமாக வாழ்க்கை யின் கரையினை எட்டுகின்ற காட்சிகள் கருத்துக்கு விருந் தாக இந்நூலில் காணக் கிடக்கின்றன. எளிய நடை யாயினும் சுவை குன்றாது படித்து முடிக்க வேண்டு மென்ற ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது அதன் தனிச் சிறப்பாகும். அனைவரும் படித்துப் பயன் பெறத்தக்க விதமாக இந்நூலினை ஆக்கித் தந்துள்ள அன்பரைப் பெரிதும் பாராட்டு கிறேன். 

Read More...
Paperback
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கே.பி.நீலமணி

கே. பி. நீலமணி ஒரு தமிழ் எழுத்தாளராவார். கே. பி. நீலமணி அவர்களின் மனைவி ஜானகி நீலமணி. கே. பி. நீலமணி அவர்கள் மயிலாப்பூரில் கடன் வழங்கும் நூலகம் ஒன்றை நடத்திவந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மனைவி அந்நூலகத்தை நடத்தி வருகிறார். இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும்; திருவாளப் புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையவர்களிடமும் முறையாக வயலின் கற்றுத் தேர்ந்தவர். ஆயினும் இசையைத் தொழிலாகக் கொள்ளாமல் தினமணியில் ஆசிரியர் குழாமில் பணியாற்றி வந்தார்.

Read More...

Achievements

+15 more
View All