Share this book with your friends

SAMUDRAM NOVELS / சமுத்திரம் பெருங்கதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. பாலைப்புறா
2. வேரில் பழுத்த பலா
3. தாழம்பூ
4. வளர்ப்பு மகள்
முற்போக்கு எழுத்தாளர்களில் சிறந்த ஒருவர் சு.சமுத்திரம்! கருத்தரங்கு ஒன்றில் அறிமுகமாகி உடன்பிறவா உற்ற உறவானவர்! அவருடைய படைப்புகள் அனைத்தையும் திறனாய்ந்து 300 பக்க அளவில் எழுதிய நூல்வரைவை நியூ செஞ்சுரி பதிப்பகத்துக்கு அனுப்பினேன்.அதை நூலாக்கும் தகுதி உடையது என அப்பதிப்பகத்தின் நூல் தேர்வுக்குழு ( வல்லிக்கண்ணன்) பரிந்துரைத்தது.
அப்போது பதிப்பகத்துக்கும் சு சமுத்திரத்துக்கும் ஏதோ கருத்து வேறுபாடு . அதனால் நூல் வரைவை அவர்களிடமிருந்து வாங்கி வந்து மதுரையில் என் இல்லம் வந்து கொடுத்துத் தானே தம் ஏகலைவன் பதிப்பகம் வாயிலாக வெளியிடப் போவதாகப்பெற்றுச் சென்றார்.! அப்போதைய அவரது பண நெருக்கடியால் அதை 150 பக்கங்களாகச் சுருக்கி "சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்" என்ற தலைப்பில் வெளியிட்டு" ராயல்டியும் " அனுப்பினார். மகளிர், தொழிலாளர், தாழ்த்தப்பட்டமக்கள் எனும் 3 பிரிவாகச் சமுதாய மாற்றங்கள், மேம்பாடு/ முன்னேற்றம்,மாற்றம்/ சமநிலை என்ற வகையில் முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகவே தொகுக்கப் பட்டுள்ளன. வாடாமல்லி அவரது சிறந்த புதினம்! அன்றைய நாளில் அவருடைய சிறுகதைகளில் காணப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு அவரைச் சிறுகதை இயக்கமாகவே கருத வைத்தது . படைப்புகளில் கோவை. ஞானி, நான் சுட்டிக் காட்டிய குறைகளை ஏற்றுக் கொண்டு இனி அவற்றைக் களைவேன் எனப் பண்புடன் கூறிய பெருந்தன்மை போற்றத் தக்க ஒன்று!

Read More...
Paperback
Paperback 1050

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(6) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி

எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலைவெண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.

Read More...

Achievements

+15 more
View All