Share this book with your friends

SATHYA VELLAM (Novel) / சத்திய வெள்ளம் நாவல்

Author Name: Na. Parthasarathy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இதில் வருகிற அண்ணாச்சியும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மணவாளனும், பிச்சைமுத்துவும், கதிரேசனும், துணைவேந்தரும், பேராசிரியர் பூதலிங்கமும் பொழில் வளவனாரும், பூரீராமனும், இராவணசாமியும், அமைச்சர் கரியமாணிக்கமும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை. 1966-1971-க்கு இடையில் ஏதோ சில ஆண்டுகளை - (அவை எந்த ஆண்டுகளாக இருந்தால் தான் என்ன?, அப்படி அப்படியே சித்திரித்துக் காட்டும் பிரதி நிதிகளாகவே அவர்கள் இந்தக் கதையில் வருகிறார்கள், வந்தார்கள். அண்ணாச்சியைப்போல் விளம்பரத்தையும், புகழையும் விரும்பாமல், பொதுக் காரியங்களுக்காக ஒடாய் உழைத்துத் தேய்ந்து மாயும் தொண்டன் ஒருவன் ஒவ்வோர் இடத்திலும் ஏதாவது ஒரு பெயரில் தெய்வத்தின் காரியங்களைச் செய்தபடி பாமர மனிதனாக நடமாடிக் கொண்டிருப்பான். அவனைத் தேடி அடையாளம் கண்டு மரியாதை செய்கிற போதுதான் சமூகமும் மரியாதைக்கு உரியதாகிறது. சமூகத்தின், மரியாதையை நாம் கணிப்பதற்கு அது யார் யாரை மரியாதை செய்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டியதா இருக்கிறது. அப்படி மரியாதைகளைத் தெ ந்து கொண்டவர்களுக்கு இந்த நாவலின் அர்த்தங்கள்-உள்ளர்த்தங்கள் எல்லாம் மிகவும் நன்றாகவே புரிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.

- நா.பா.

Read More...
Paperback
Paperback 599

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

Read More...

Achievements

+15 more
View All