You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசீன வரலாற்றை, மகான் கன்பூஷியஸ் கால முதல் செஞ்சீனத் தலைவன் மா-சே-துங் காலம் வரையிலும் நான்கு நூல்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பார்த்த நூல்களெல்லாம் கிடைத்துவிட்டதாலும், வாசகர்கள் ஒரே நாளில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய வசதிக்காகவும் ஒரே நூலாக்கி வெளியிடுகிறோம்.
ஆகவே 2500 ஆண்டுகளாக சீனம் எழுப்பிய குரலின் வரலாற்றை இதில் காணலாம். ஏதாவது விடப்பட்டிருந்தால் அவ்வளவு முக்கியமானதல்ல என்ற நோக்கத்தால் விடப்பட்டிருக்கும். சுமார் இருபது மூல நூல்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்து எழுதப்பட்டிருக்கிறது.
பசிக்குரல், பரிகாபக்குரல், அழுகுரல், அதிகாரக்குரல், சர்வாதிகாரக்குரல், ஆண்குரல், பெண் குரல், அபலைக்குரல், வஞ்சகக்குரல், ஞானக்குரல், விஞ்ஞானக்குரல், மறுமலர்ச்சிக்குரல், புரட்சிக் குரல் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தே இந்த, 'சீனத்தின் குரல்' உங்களிடம் வருகிறது.
சி. பி. சிற்றரசு
சி. பி. சிற்றரசு (ஏப்ரல் 11, 1906 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.