You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசீவக சிந்தாமணி ( மூலமும் உரையும்) இரண்டு புத்தகங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது முதல் புத்தகம்.
சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந்து இரப்பார்க்கு வேண்டும் பொருள்களை யாண்டும் வழங்கும் இயல்புடையது.
இப்பெயர் இந்நூலிற்கு அமைந்ததற்குப் பல காரணம் இருப்பினும் ஒளிகெடாத ஒரு மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்தமாகும். இந்நூல் தோன்றிய காலமுதல் புகழ் குன்றாதுநின்று நிலவுவதே அதனை யுணர்த்தத் தக்க பெருஞ் சான்றாம்.
இக்காலத்து இளைஞர்கள் எல்லா நூல்களுக்கும் எளிதிற் பொருள் காண முயல்கின்றார்கள் என்பதும், நச்சினார்க்கினியருரை நயத்தைக் கூறக்கேட்டு மெச்சுவாரேயன்றிக் கற்க நச்சுவார் எவரும் இலர் என்பதும் நாம் அறிந்தோம். சொற்பொருளும் விளக்கவுரையும் இந்நூலுக்கு எழுதிப் பதித்தால் எளியபுலவரும் இளைஞரும் கற்று நற்பயனடைவர் என ஆய்ந்தோம். எளிய உரைநடையிற் பொருளும் விளக்கமும் எழுதிக் தரும்படி இயம்பினோம். உயர்திரு. புலவர், "அரசு" அவர்கள் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதி உதவினார்கள். பெருமழைப் புலவர் உயர்திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் ஒவ்வோர் இலம்பகத்திற்கு முதலிற் கதைச் சுருக்கம் தெளிவாக வரைந்துதவினர். அன்றியும் பல பாடல்கட்குக் குறிப்புரையும் கொடுத்து உதவினார்கள்.
காப்பியா வாசிப்பகம்
காப்பியா வாசிப்பகம்
உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.
எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.
மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.