Share this book with your friends

Sirukai alaaviya koozh / சிறுகை அளாவிய கூழ்

Author Name: Elayaraja Ganesan | Format: Paperback | Genre : Poetry | Other Details

சிறுகை அளாவிய கூழ் -என்கிற தலைப்பில் தன் அருமையான வண்ண வண்ணக் கவிதைகளை எண்ணம் ஈர்ப்புற இனிதே வடித்துள்ளார் -இளையராஜா .

வேறு வேறு கோணங்களில் விதவிதமான கவிதைகள் படைக்கும் ஆற்றல் மிகப் பெற்றவர் .

இவர்தம் படைப்பில் கவிதைகள் நடம்புரிந்து நம்மைச் சொக்க வைக்கின்றன.

இவர்தம் அத்தனை கவிதைகளும் கருத்தாழம் மிக்கவை;  கற்பனைச் செறிவை ஏந்தி நிற்பவை; அருந்தமிழுக்கு  அணி சேர்ப்பவை.

கவிதை உலகில் நிலைத்த ஓர் இடம் பிடித்து ஏற்றமும் இணையற்ற புகழும் இவர் பெறுவார் என்பதில் சற்றும் ஐயமில்லை!  இவர்தம் தமிழ்த்தொண்டு போற்றத்தக்கது என்று இயம்பவும் வேண்டுமோ?                காதலியாய் ,தோழியாய் ,யாதுமாகி நிறைந்தவளோடு , பட்டாம் பூச்சிகளாய் மாறி உலாவிய நிகழ்வுகளின் தொகுப்பே இதில் அவிழ்ந்திருக்கிறது . கற்பனையில் கடந்து வந்த காதல் ,காமம் ,பிரிவு என அத்துனையும்  இதில் புலப்படும் .
உணர்வோடு பிறந்த ,வாழ்வியலில் பார்த்த ,சில யதார்த்தமானவர்களையும் காட்டும் ,இந்நூல் ...தெற்றென அறிதல் ,விரித்து உணர்தல் , கிராமத்து சொலவடை , நாட்டுப்புற பாடல் வகை , கதைப்போக்கில் கூறல் என பல்சுவையோடு பரிமளிக்கும். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இளையராஜா கணேசன்

இளையராஜா கணேசன் .

இவர் தமிழின்பால் தீராக்காதல் கொண்டு ,வாழ்வியலைக் கூர்ந்து நோக்கும் கவிஞன் .

இந்திய தீபகற்பத்தில் புதுச்சேரியை சேர்ந்த தமிழன் .

உணவியல் மேலாண்மையில் முதுகலை பெற்ற விருந்தோம்பல் கலைஞர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் .

மேற்கத்திய உணவுக்கான சமையற்கலை நிகழ்ச்சிகள் வழங்கியவர்.

புதுவை வானொலியில் நாடகக் கலைஞர் .

நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றி பாடும் வல்லர் .

கவிதை-கட்டுரை-பேச்சுப் போட்டியில் பரிசுகள் பெற்ற வெற்றியாளர் .

மேடை நிகழ்ச்சிகளை நிரல் படுத்தி வழங்கிய தமிழ்த் தொகுப்பாளர் .

எனப் பன்முகம் கொண்டு சுழலும் செந்தமிழர் .


              

Read More...

Achievements

+1 more
View All