You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇப்புத்தகத்தின் ஒரு பாடலில் உள்ள பின்வரும் வரிகளை கொண்டே முறையே இப்பாடல்களையும், இதன் ஆசிரியரையும் அலங்கரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
"திரை மூடி ஒரு விளக்கு
அகல் தூண்ட அகரமோ
கறை நீக்கி கண்வழி
காண்பதென்ன கடவுளோ".
இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கடவுள் வாழ்த்து பாடல்கள் இவர் தியான நிலையிலிருக்கும் போது அருளப்பட்டவையாதலால், தாம் இப்பாடல்களின் ஆசிரியராக அறியப்படுவதைவிட இப்பாடல்களை தம் கடவுளின் ஒரு உருவமாக அறிமுகப்படுத்துவதிலேயே பெருமை கொள்கிறார். இத்தனை சிறப்பான பாடல்களை எழுதிவிட்டு ஒருவர் இவ்வளவு வருடம் எளிமையாக இந்த உலகில் நமது சமகாலத்தில் வாழ்ந்து வருகிறார் என்பதே வியப்பும், பெருமையும் கொள்ளச்செய்கிறது.
உதயகுமார் காங்கேசந்துறை
ஐயா திரு உதயகுமார் அவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன்துறையில் பிறந்து தற்போது டொய்ச் மொழி பேசும் தம் மனைவி திருமதி. கிளவ்டியா றைகன்பஹ் அம்மையாருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு கல்லூரி படிப்பை முடித்த வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் கருத்தாழமிக்க பல ஆன்மீக தேவார பாடல்களையும், ஞானம், காதல், குடும்பம் மற்றும் பல வாழ்வியல் சார்ந்த கவிதைகளையும் எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள போதிலும் இவர் தன்னை அங்கீகாரப்படுத்தி கொள்வதில் சிறிதும் ஆர்வமில்லாதவராக இருக்கிறார். மேலும் இவர் தம் வாழ்க்கையின் ஊடே பல அதிசயங்களையும் சித்துக்களையும் கண்டு அறிந்திருந்த போதிலும் தனெக்கென எந்த அடையாளமும் வந்து விடாதபடி சிரத்தையுடன் தமது சராசரி குடும்ப வாழ்க்கையில் இருந்து வருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.