Share this book with your friends

SUYAMVARAM ( Story) / சுயம்வரம் கதை

Author Name: Vindhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நடக்கக்கூடாத இது நடந்தது 1951-ம் ஆண்டில்.

அப்போது ‘சுத்த சுயமரியாதை வீர’னாக இருந்து வந்த நான், இப்போது சில இடங்களில், சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போவதுபோலப் போயிருந்தால் நானும் மற்றவர்களைப் போல சினிமா உலகிலும் பிரகாசித்திருக்கலாம். அந்த ‘புத்தி’ அப்போது இல்லாததால் அதிலிருந்தும் விலகி, சுதந்திர எழுத்தாளனாக இருந்து ‘சுடர்’ விடப் பார்த்தேன். நான் விட முயன்றாலும் என்னை விட விரும்பாத சுயமரியாதையோ அதற்கும் குறுக்கே நின்று தொலைந்தது.

‘இதெல்லாம் எதற்கு, சொந்தமாக ஒரு பத்திரிகையே நடத்திப் பார்த்துவிடுவோமே? என்று 1954-ம் ஆண்டில் ‘மனித’னை ஆரம்பித்தேன். மக்கள் ஆதரவு அதற்கு அமோகமாக இருந்தும், விற்பனையாளர்கள் செய்த ‘சத்திய சோதனை’யாலும், அந்தச் ‘சத்திய சோதனை’ யிலிருந்து அவ்வப்போது மீள்வதற்கு வேண்டிய பொருளாதார வசதியோ, மீட்பதற்கு வேண்டிய நண்பர்களோ இல்லாததாலும் அதுவும் பிறந்த ஓராண்டு காலத்துக்குள்ளேயே பிராணனை விட்டுவிட்டது. இதனால் எனக்கு நேர்ந்த இழப்புகளிலெல்லாம் மிகப் பெரிய இழப்பு, என்னுடைய நீண்ட நாள் நண்பரும், ஸ்டார் பிரசுரத்தின் உரிமையாளருமான திரு. ராமநாதனின் நட்பை நான் இழந்ததாகும். அதற்குப் பின் எத்தனையோ பிரசுரகர்த்தர்கள், எத்தனையோ பிரசுரங்கள் - ஒன்றும் உருப்படியாக வர வில்லை. வந்தாலும் அவை புத்தக உலகில் நீடித்து நிற்க அந்தப் புண்ணியவான்கள் விடவில்லை.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விந்தன்

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

Read More...

Achievements

+15 more
View All